சிங்கப்பூர்.மே.20., சிங்கப்பூரில் மூத்த அமைப்பான 'ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்' சார்பில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது...! இயற்கை சூழ , மிகப் பழைமையான பள்ளிவாசலான 'உமர் சல்மா' மஸ்ஜிதை தேர்வு செய்து அங்கே நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வில், சிங்கப்பூரின் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜனாப் முகம்மது பைசல் இப்ராஹிம் அவர்களும், 8 நாடுகளை சேர்ந்த தூதர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுடன் 'UIMA' அமைப்பின் அழைப்பை ஏற்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களும் பங்கேற்றார். இந்த அமைப்பு, முன்னாள் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சிங்கையின் தந்தையான லீ-குவான்-யூ அவர்களின் நண்பருமான, நாகூர் வம்சாவளியை சேர்ந்த, காலம் சென்ற #ஜனாப்_அப்துல்_ஜப்பார் அவர்கள் முன்னின்று உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசும் இனிய திறந்தவெளி சூழலில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வில், வசதி குறைந்தவர்களுக்கு ரமலான் அன்பளிப்பு பைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சங்கத்தலைவர் பரியுல்லாஹ், சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சமூக ஆர்வலர் ஜஹாங்கீர், #UIMA அமைப்பின் CEO ஹாஜா மெய்தீன், பிரபல தொழில் அதிபர் அகமது புஹாரி (BSA அவர்களின் மகன்), சிங்கப்பூர்-இந்திய வர்த்தக சங்க தலைவர் சந்துரு,
செய்திகள்
மிகச்சிறந்த ஆளுமை BSA! சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சிங்கப்பூர்.மே.19., இன்று சிங்கப்பூரில் #B_S_அப்துல்_ரஹ்மான் பல்கலைக்கழக (#கிரஸண்ட்) முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய #இஃப்தார் நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார். பிரபல சமூகசேவை நிறுவனமான ஜாமியாவின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் , அவரை சங்கத்தின் தலைவர் #இப்ராகிம் ,மற்றும் நிர்வாகிகளான #யூசுப், #ராஜகணேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். #மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில் பேசியதாவது , பல இன மக்களும் இணைந்தும், கலந்தும் வாழும் சிங்கப்பூரில் B.S.அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், B.S.அப்துல் ரஹ்மானை நினைவு கூறுவது அவசியம் என கருதுகிறேன் . அவர் கடும் உழைப்பால் உயர்ந்தவர். #MGR-க்கும், #கலைஞருக்கும் இடையில் ஒரே நேரத்தில் நண்பராக திகழ்ந்தார் . அதனால் தான் இருவரின் ஆட்சியிலும் அவர் பல திட்டங்களை ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுத்தினார். அண்ணா மேம்பாலம், மெரீனா லைட் ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூலகம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, புதிய சட்டமன்றம் என பல கட்டிடங்களை இவரது நிறுவனம் தான் கட்டியது. நவீன சென்னையின்
மஜக வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.மே.19., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (18.05.2018) மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் #கௌஸ்_குஸ்ரு_மொஹிதீன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 03.06.2018 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது என்றும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் அண்ணன் #M_தமிமுன்_அன்சாரி மற்றும் மாநில பொருளாளர் அண்ணன் #S_S_ஹாரூன்_ரஷீத் அவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் #J_S_ரிபாயி_ரஷாதி அவர்களை அழைத்து வேலூர் கிழக்கு மாவட்டத்தில் இஃப்தார் நிகழ்ச்சி கொணவட்டம் பகுதியில் நடத்துவது முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன் மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர் வர்த்தகர் அணி செயலாளர் ஷமீல் 3ம் மண்டல நிர்வாகிகள்முஹம்மத் பாய்ஸ், அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ்,ஜாபர்,ரிஸ்வான் அஸ்லம் பாஷா, சர்வர் ஆகியோர் கலந்து கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 19.05.2018
குதிரை பேரத்திற்கு முற்றுப்புள்ளி.
(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) கர்நாடகாவில் குறுக்குவழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்று முயற்சித்த பாஜகவின் கனவில் மண் விழுந்திருக்கிறது . காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து 8 MLA களை உருவி , குதிரைப்பேரம் மூலம் கவர்னர் உதவியோடு அவர்கள் போட்ட சதித்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த 'செக்' காரணமாக நினைத்தது நடைபெறாமல் போய்விட்டது . முதலமைச்சராக பதவியேற்ற 56 மணிநேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்யும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் . இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது . பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி மஜதவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது வரவேற்கதக்கது . பொதுவில் குமாரசாமி ஒரு அதிர்ஷ்டக்காரர் . அவர் அப்பா தேவகௌடாவை போலவே! முன்பு ஐக்கிய முன்னணி ஆட்சியில் ஒன்றுபட்ட பழைய ஜனதாதளத்தின் சார்பில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பிரதமர் ஆனார் . அதே அதிர்ஷ்ட காற்று குமாரசாமியின் பக்கமும் திரும்பியுள்ளது . இவர்களின் கூட்டணி ஆட்சியில் கர்நாடகா வளம் பெற வேண்டும் . நல்லாட்சி கொடுத்த சித்தராமையாவுக்கே முழுமையான வெற்றியை மக்கள் கொடுக்கவில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். அதுபோல் காவிரி ஆற்று உரிமையில்
பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திப்போம்..! ஜொஹூர் இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உருக்கம்..!!
ஜொஹர்.மே.18., இன்று மலேசியாவின் ஜொஹூர் பாரூ மாநகரில் #மஸ்ஜித்_இந்தியா (தமிழ் ஜமாத்) பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார். அவரை பள்ளிவாசல் தலைவர் டத்தோ.ஹாஜா மைதீன் அவர்களும், இமாம்கள் மெளலவி.ஹாபிழ் சல்மான் பாரிஸ் மிஸ்பாஹி, மெளலவி.ஹாபிழ் முஹம்மது யஹ்யா மிஸ்பாஹி ஆகியோரும் வரவேற்றனர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற அந்த இஃப்தார் நிகழ்வில் பேசியவர், புனித ரமலானில் #பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது. 60க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கண்ணீரில் அங்கே ரமலான் கழிகிறது. விடுதலைக்கு ஏங்கும் #பாலஸ்தீன_மக்களுக்காக_இறைவனிடம்_பிரார்த்தியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். புனித ரமலானில் உலகெங்கும் அமைதி நிலவ பாடுபட வேண்டும் என்றார். பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன்.மஹாதீர் மீண்டும் பிரதமராகி இருப்பது உலகளவில் பேசப்படுவதாகவும், தமிழகத்திலும் எதிரொளிப்பதாகவும் கூறினார். மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற பணிகளை அனைவரும் வரவேற்று பேசினர். MKP - ஜொஹர் மாநகர நிர்வாகிகள் பீக்கர் அலி, அட்டாக் சுல்தான், அபுல் பரக்கத், சாஹுல் ஹமீது, அமீன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுச்செயலாளரை சந்திக்க ஜொஹூர் மாநிலம் முழுவதும் உள்ள இந்திய பிரமுகர்கள் வருகை