ஜன.17., இன்று அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் நடந்த மாணவர்கள் மறியல் போராட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ஏ.அஸ்கர் கான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பவாசிர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில் நுட்ப அணி, மதுரை தெற்கு 17_01_17
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
அண்ணன் ம.நடராஜன் அவர்களின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணைய தள பதிவு) நேற்று(16-01-2017) தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் அண்ணன் ம.நடராஜன் அவர்களின் பேச்சு தமிழக அரசியலில் புதிய அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசும், பாஜகவும் தமிழக அரசை கபளீகரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் ஒருபுறம் வலுப்பெற்று வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் தருணத்தில் சோ அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையை உருவாக்கினார். இந்நிலையில், அண்ணன் ம.நடராஜன் அவர்கள், தமிழக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல் RSS சிந்தனையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் RSS சார்பு சுதேசி இயக்கத்தில் பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பிராமண நண்பர்கள் உண்டு என்றும், பாஜக ஆதரவு பிராமணர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் குமுறியுள்ளார். சாதி,மதம் பேதமில்லாத தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கப்பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவெனில், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கலத்தில் மஜக…
ஜன.17., அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்று வரும் மக்கள் எழுச்சி போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) சார்பில் மாநில கொள்கைபரப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி நேரில் சென்றார். அவருடன் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா மாவட்ட துணைசெயலாளர்கள் வழக்கறிஞர் ஜமாலுதீன், பரூக், விவசாய அணி செயலாளர் சசிகுமார் மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் உள்ளிட்ட மஜகவினர் சென்றனர். போராட்டம் நடத்தும் முன்னணி செயல் வீரர்களுடன் கலந்துரையாடிவிட்டு போராட்டம் அமைதி வழியில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவல்துறை இப்பிரச்சினையை மென்மையாக கையால வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT_wing) மதுரை வடக்கு, தெற்கு. 17_01_2017
கும்பகோணத்தில் மஜக தஞ்சை (வடக்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…
கும்பகோணம் டவுன் நாடார்கள் திருமண மண்டபத்தில் தஞ்சை வடக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் நீதிபோதனை செய்தார், குடந்தை நகர செயலாளர் நிஜாம் மைதீன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாசீன், முகம்மது சேக்தாவூது, அணி செயலாளர்கள் சேக் முகம்மது அப்துல்லாஹ், வஜீர் அலி , சிராஜீதின், முகம்மது தஃபீக், ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹீம், இப்ராஹீம்ஷா முன்னிலை வகித்தார்கள். மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது , மாநில செயலாளர் ராசுதீன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், நன்றியுரை மாவட்ட து.செயலாளர் முகமது யாசின் நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, தஞ்சை(வ) மாவட்டம்
மஜக மாநில பொருளாளர் நாகை மாவட்டம் வருகை..
மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் மாநில பொருளாளர். எஸ்.எஸ்.ஹாருன்ரசீத்.M.com.அவர்கள் நாகை மாவட்டம் தோப்புத்துறை வருகை புரிந்தார்கள். துபாய் மண்டலத்தின். ஆற்றல் மிக்க செயல்வீரர் தோப்புத்துறை ஜின்னா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து அவர் இல்லம் சென்று நலம் விசாரித்தார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புதுரை. ஷேக் அப்துல்லாஹ் மற்றும் பகுதி நிர்வாகிகள் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி நாகை மாவட்டம் 16_01_2017