சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தை தொடர்ந்து ஜித்தா மண்டலத்திலும் 03.03.2017 ம.ஜ.க.வின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பிக்கும் வண்ணமாக மண்டல செயலாளர் மஸ்தான் தலைமையில், மண்டல பொருளாலர் அதிரை சேக் முண்ணிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து மாநில துனைபொதுச்செயலாளர் அண்ணண் மைதீன் உலவி அவர்கள் காணொளி மூலம் சிறப்புறை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் ஜித்தா மண்டல ஆலோசராக ஆக்கூர் ரிபாய், மற்றும் மதினா நகரத்தின் அமைப்பாளராக திருமுல்லை வாயில் ஜாபர் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானம்.... 1.இக்கூட்டம் தாயகத்தில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்திற்க்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. 2.வரும் காலங்களில் ஜித்தா மண்டலத்தில் உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக துனைசெயலாளர் பங்குராஜ் அவர்கள் நன்றிவுரை கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.. மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT_WING ஜித்தா மண்டலம்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
பரமக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சார்பாக மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எமனை சாகுல் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி மேலபள்ளிவாசல் கிளை சார்பாக மேலபள்றிவாசல் அருகிலும், எமனேஸ்வரம் கிளையின் சார்பாக கான்ஷாகிப் திடல் மற்றும் திப்புசுல்தான் தெரு ஆகிய இரு இடங்களில் பிரம்மான்டமாக நம்முடைய புரட்சி கொடி பட்டொளிவீசி பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் நம் புரட்சிகொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்செயளாளர். முஹம்மது இலியாஸ், பொருளாளர்.Mmசெய்யது, மா.து.செ. அப்துல்கபூர், மற்றும் பைசல் ரசித், பரமக்குடி பொருளாளர் அப்துல்அஜிஸ் மாணவர்இந்தியா செயளாளர் ஆசிக். எமனேஸ்வர கிளை செயளாளர். ஹபிப்ரஹ்மான் பொருளாளர் தமீம்அன்சாரி, மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயளாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை கூட்டம்…
திருவாரூர்.மார்ச்.03., கடந்த 02/03/2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி கிளை ஆலோசனை கூட்டம் முன்னால் மாவட்ட துணை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அவர்களும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக் மற்றும் முன்னால் மாவட்ட துணை செயலாளர் எரவாஞ்சேரி அபுல் கலாம் ஆசாத் அவர்களும் இரண்டு புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி சிறப்பித்தனர். மற்றும் 20 புதிய உறுப்பினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திருவாரூர் மாவட்டம் 02/03/2017
நெடுவாசல் போராட்டக்களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி…
புதுகை.மார்ச்.02., புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டக்களத்திருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகைதந்து ஆதரவு தெரிவித்தார்கள். அவரை போராட்டக் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் பேசும்போது அவரது கருத்தை வரவேற்று அடிக்கடி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆதரவு குரல் கொடுத்து முழக்கங்கள் எழுப்பினர். இன் நிகழ்வை தொலைக்காட்சிகள் நேரலைலாக ஒளிபரப்பினர். நெடுவாசல் ஊர் முழுக்க மத்திய மோடி அரசிற்கு எதிராக கூக்குரல் எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது. சாரை சாரையாக ஆண்களும் , பெண்களும் மத்திய அரசிற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியபடியே வந்துகொண்டிருக்கின்றனர், வருகை தரும் அனைவரையும் ஊர்மக்கள் சார்பில் ஒரு குழு கைக்கூப்பி வரவேற்த்துக்கொண்டே இருக்கிறது. வருபவர்களுக்கு ஊர் மக்களே சமையல் செய்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிராமம் முழுவதும் எழுச்சியாக இருக்கிறது. தமிழன் என்ற முழக்கமும், மண்ணை காப்போம் என்ற முழக்கமும் எங்கும் எதிரொலிக்கிறது. இப்போராட்ட களத்திற்கு பொதுச் செயலாளருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா,
ஆலந்தூரில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க கொடியேற்று நிகழ்வு…
காஞ்சி.மார்ச்.01., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆதம்பாக்கம், மற்றும் ஆலந்தூர்க்குட்பட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடிகளை ஏற்றி உரை நிகழ்த்தினார்கள். திரளான மஜகவின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொடிகளுடன் அணிவகுத்தனர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) காஞ்சி வடக்கு. 01.03.2017