சிறைவாசிகள் முன் விடுதலை ! தமிழக முதல்வருக்கு மஜக நன்றி!

image

நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:-

MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதை மஜகவின் சார்பிலும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் வரவேற்க்கிறோம்.

இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

அதுபோல இக்கோரிக்கையை நேர்மையாக அனுகிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .C. V. சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சட்டமன்றத்தில் எங்களோடு இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
        
இந்த விடுதலையால் சாதி, மத, வழக்கு பேதமின்றி அனைத்து கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
     
இதை மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு, குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கருணையோடும், கனிவோடும், மனிதாபிமானதத்தோடு பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
  
இவ்வாறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

இச்சந்திப்பில் , தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதின், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் , மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை. முபாரக் , மாவட்ட செயலாளர் செய்யது ரியாசூதின், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் ஹமீது ஜெஹபர், நாகூர் நகரச் செயலாளர் ஷேக் இஸ்மாயில் , நாகை நகர துணைச் செயலாளர் அப்துல் மஜீது ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
01.01.2018