ஆலந்தூரில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க கொடியேற்று நிகழ்வு…

image

image

காஞ்சி.மார்ச்.01., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆதம்பாக்கம், மற்றும் ஆலந்தூர்க்குட்பட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது.

இதில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடிகளை ஏற்றி உரை  நிகழ்த்தினார்கள்.

திரளான மஜகவின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொடிகளுடன் அணிவகுத்தனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக்,  தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
காஞ்சி வடக்கு.
01.03.2017