பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் வாழ்த்து !

image

கல்விதான் வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு என்பது
உயர்கல்விக்கான நுழைவாயிலாக திகழ்கிறது. லட்சியங்களை நெஞ்சில் சுமந்து வாழ்வில் முன்னேற துடிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கைதான் மாபெரும் வெற்றிகளுக்கு பாதை அமைக்கிறது. எனவே பதற்றமில்லாமல், தெளிவான மனநிலையோடு தேர்வுக்கு செல்லுங்கள். உங்கள் பேனா குனிவது, உங்களின் எதிர்கால தலைநிமிர்வுக்காக என்பதை மனதில் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
01.03.17