சிவகங்கை.மார்ச்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஜகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் தெய்வபுஷ்ப ஊரனிகரையில் 04-03-2017 மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.com., அவர்களும், தோழமை கட்சியான அஇஅதிமுகவின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட செயலாளருமான சகோதரர் #செந்தில்_நாதன் அவர்களும், அஇஅதிமுகவின் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் #மாரியப்பன்_கென்னடி அவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். முன்னதாக பேசிய மாநில பொருளாளர் ஹாருன் ரசீது அவர்கள் தன்னுடைய 43 வயதில் சுத்தம் செய்து பார்த்திடாத ஊரனியை முயற்சி எடுத்து சுத்தம் செய்த தப்பாத்தை சாகுல் அவர்களுக்கும் உதவியாக இருந்து செயல்பட்ட கான்சா உஸ்மான் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இளையான்குடிக்கென்று ஓர் பண்புள்ளதாகவும் அனைத்து விஷயங்களுக்கும் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே மக்களிடம் பொருளாதார உதவியை பெற்றுசெயல்படுவோம். தற்போதும் அதே போல் மக்களிடம் பொருளாதார உதவி பெற்று ஊரனியை சுத்தம் செய்துவிட்டோம். ஊரனியை தூர்வாருவது பேவர்பிளாக் நடைபாதை அமைப்பது
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மெரினா போராட்ட மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை.மார்ச்.05., தமிழகத்தில் பெரும் மாணவர் புரட்சியை உருவாக்கிய ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்திற்க்கு பின் போராட்டத்தை வழிநடத்திய மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டத்தின் முதல் அமர்வு நேற்று (04.03.2017) சென்னையில் நடைப்பெற்றது. மாணவர் இந்தியா சார்பாக மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் பங்கேற்றனர். இதில் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து "தமிழக மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு" (Confederation Of Tamilnadu Students Organization-COTSO) உருவாக்கப்பட்டது.கூட்டமைப்பின் அடுத்த அமர்வில் கொள்கைகள்,செயல்பாடுகள் குறித்து இறுதி முடிவு வகுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஊடகபிரிவு : மாணவர் இந்தியா தலைமை
ரியாத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனை கூட்டம்!
ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் பொருளாலர் நிவாஜிதீன், துணைச் செயலாளர்கள் ஹாஜாமைதின், நைனார், சிக்கத்தர், சாதிக் பாஷா, முகம்மது யூசுப்தின், IT WING நிர்வாகிகள் காயல் காதர் சாகிப் (தங்க தம்பி), முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, ஒலாயா, தரயா பகுதிகளில் கிளைகள் துவங்குவது, இலவச குர்ஆன் வழங்குவது, தர்பியா நிகழ்ச்சி நடத்துவது, இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக உம்ரா செல்வதற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இன்று ரியாத் நசியா பகுதியில் கிளை துவங்கப்பட்டது. ரியாத்தில் பணிபுரியும் சகோதரர்கள் IKP-யில் சேர்ந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) ரியாத் மண்டலம்.
தம்மாம் மண்டலம் அல் ஜூபைல் கிளை கூட்டம்…
சவூதி அரேபியா தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட அல் ஜூபைல் மனிதநேய கலாச்சாரப் பேரவை கிளை மாதாந்திர கூட்டம் 03-03-2017 வெள்ளிக்கிழமை கிளை செயலாளர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பொருளாளர் எம்.ஹஜ் முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளையின் துணைச்செயலாளராக ஹஜ் முகம்மது அவர்களை நியமனம் செய்யப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், இரத்தான முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING தம்மாம் மண்டலம்
முதல்வருடன் நாகை MLA சந்திப்பு ..!
நாகை தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் . துறைமுகம் மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 7 முக்கிய தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் கையளித்தார் . அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்களும் உடனிருந்தார் . இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் முதல்வர் , தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கூறினார் . பிறகு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு . ஜெயக்குமார் அவர்களை சந்தித்து தொகுதியில் இருக்கும் மீனவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி அவற்றை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்