(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை...) தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம் முதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்பில் இருக்கும் மாணவ, மாணவிகள் ஓரிரு மதிப்பெண்கள் குறையும் போது ஏமாற்றம் அடையக்கூடிய சூழலும், இதனால் மனம் வெதும்பக் கூடிய நிலையும் ஏற்பட்டு வந்தது. இந்த ஆண்டு தரவரிசை முறையில் ( Ranking System ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் அறிவித்தார். அதன் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நடைமுறையை கல்வியாளர்களும், மாணவர் சமுதாயமும் வரவேற்று மகிழ்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த முயற்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மனனம் செய்யும்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
நெய்வேலியில் இரண்டு கிளைகளில் கொடியேற்றம் நிகழ்ச்சி…
கடலூர்.மே.12., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலிக்குட்பட்ட இரண்டு கிளைகளின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நகர பொருளாளர் ஜாஹீர் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் இப்ராகிம் கொடியேற்றி தொடங்கி வைத்தார்கள். உடன் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக நகர இளைஞர் அணி செயளாலர் மன்சூர், நகர இளைஞர் அணி துணை செயலாளர் அசாருதீன், ஒன்றிய செயலாளர் ராஜா முஹம்மத், ஒன்றிய துணை செயலாளர்கள் பாபர் ஒலி, அப்துல் ரஹுமான், பாபு மற்றும் ஜமாத் நிர்வாகி செயலாலர் ஹசன் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 12.05.2017
பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் மஜக பொருளாளர் சந்திப்பு…
சென்னை.மே.10., வேலூர் மாவட்டம் ஆம்பூர் பிலால் நகரில் உள்ள (SAFIYAMA PRIMARY SCHOOL) சஃபியாமா ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் (NAYA MADRASA URDU PRIMARAY SCHOOL) நயா மதரசா உருது ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும், சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் அமைந்துள்ள அரசு முஸ்லிம் உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக அப்பள்ளிகளின் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று 09.05.2017 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.எ.செங்கோடையன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுதாஹிர், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் J.M.வசிம் அக்ரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பள்ளிக்கூட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை. 09.05.2017
குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளுடன் நாகை MLA கலந்தாய்வு!
நாகை.மே.09., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் நாகை நகராட்சி ஆணையர், திருமருகல் மற்றும் நாகை ஒன்றிய BDOக்கள், பொறியாளர்கள் அடுத்தடுத்து கலந்துக் கொண்டனர். இதில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்தக்கட்ட திட்டமிடல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி தனது 2017-2018 ஆண்டுக்கான இரண்டு கோடி ரூபாய் நிதியிலிருந்து திருமருகல் ஒன்றியத்திற்கு 50 லட்சம், நாகை நகராட்சிக்கு 47 லட்சம், நாகை ஒன்றியத்திற்கு 25 லட்சம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு 15 லட்சம் என ஆகமொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார். பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். குடிநீருக்காக தனது நிதி ஒதுக்கீடு குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். நாகை, நாகூர் கடற்கரைகளின் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், திட்டச்சேரியில் புதிய ரேஷன் கடை ஆகியவை குறித்தும் இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09/05/2017
நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!
நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில துணைச்செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பந்தலை திறந்துவைத்தார். மாநில விவசாய அணியின் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் தோப்புத்துறை சேக் மன்சூர், நாகை நகர செயலாளர் கண்ணுவாப்பா என்கிற சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாகை நகர மஜக சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு தினமும் மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படும். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகப்பட்டினம் மாவட்டம் 07-05-2017