பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் மஜக பொருளாளர் சந்திப்பு…

image

சென்னை.மே.10., வேலூர் மாவட்டம் ஆம்பூர் பிலால் நகரில் உள்ள (SAFIYAMA PRIMARY SCHOOL) சஃபியாமா ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும்,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் (NAYA MADRASA URDU PRIMARAY SCHOOL) நயா மதரசா உருது ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும்,

சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் அமைந்துள்ள அரசு முஸ்லிம் உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கவும்

தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக அப்பள்ளிகளின் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று 09.05.2017 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.எ.செங்கோடையன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுதாஹிர், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் J.M.வசிம் அக்ரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பள்ளிக்கூட நிர்வாகிகள்  உடன் இருந்தனர்.

தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
சென்னை.
09.05.2017