சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தை தொடர்ந்து ஜித்தா மண்டலத்திலும் 03.03.2017 ம.ஜ.க.வின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பிக்கும் வண்ணமாக மண்டல செயலாளர் மஸ்தான் தலைமையில், மண்டல பொருளாலர் அதிரை சேக் முண்ணிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து மாநில துனைபொதுச்செயலாளர் அண்ணண் மைதீன் உலவி அவர்கள் காணொளி மூலம் சிறப்புறை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் ஜித்தா மண்டல ஆலோசராக ஆக்கூர் ரிபாய், மற்றும் மதினா நகரத்தின் அமைப்பாளராக திருமுல்லை வாயில் ஜாபர் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானம்.... 1.இக்கூட்டம் தாயகத்தில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்திற்க்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. 2.வரும் காலங்களில் ஜித்தா மண்டலத்தில் உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக துனைசெயலாளர் பங்குராஜ் அவர்கள் நன்றிவுரை கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.. மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT_WING ஜித்தா மண்டலம்
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
குவைத் மண்டலம் MKP சால்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்…
குவைத்.பிப்.16., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 17/02/2017 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு முர்காப் ரவுண்டானா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், கிளை து.செயலாளர் சகோ. சிதம்பரம் ஹாஜா மைதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தர அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
பஹ்ரைன் மண்டல மஜக கருத்தரங்கம்…
ஜன.28.,பஹ்ரைன் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "மோடி சொன்னதும் - செய்ததும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மிக மிக அருமையான முறையில் 27-01-2017 அன்று சவுத் பார்க் ஹோட்டலில் மண்டல செயலாளர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டல துணை செயலாளர் சாவண்ணா, மண்டல ஆலோசகர் ஆரிப், மருத்துவ சேவை அணி செயலாளர் வசீம் ராஜா, தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் சுபகான், செயற்குழு உறுப்பினர்கள் அலாவுத்தீன், சாகுல் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்தினர். இறுதியாக மண்டல பொருளாளர் மன்னை அலி நன்றி கூறினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, பஹ்ரைன் மண்டலம். 27.01.17
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…
ஜன.26., உலகிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது இந்திய திருநாடு விளங்குகிறது. பல்வேறு இனம், மதம், மொழிகளை அடிப்படையாக கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதி ஏற்று நடக்கும் நமது நாட்டின் மக்கள் பல்வேறு தீய சக்திகளுக்கு இடம் அளிக்காமல் தீவிரவாதம், மதவாத சக்திகளை அடியோடு வேறறுக்கும் தன்மை கொண்ட மக்கள் தொடர்ந்து இன்னமும் பாடுபடக்கூடிய வகையில் சகோதர உணர்வோடு செயல்பட்டு நமது நாட்டின் *68 வது குடியரசு தினம்* கொண்டாட போகும் நாம் மகிழ்ச்சியோடு கொண்டாட *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி, 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!
ஜன.15., துபாய் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகி ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் திருமணத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் S.S ஹாரூன் ரசீது ஆகியோர் லால்பேட்டை வருகை தந்தனர். மஸ்ஜீதுல் நயீம் பள்ளியில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக, ஜமாத்துல் உலமாவின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களை அவர் வீட்டிற்க்கு சென்று பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA சந்தித்தார். அவருடன் பொருளாளர் ஹாரூன் ரசீத், மற்றும் கடலூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர். பெருத்த உற்சாகத்தோடு மஜக நிர்வாகிகளை வரவேற்று உற்சாகப் படுத்தினார். அதுப்போல் முஸ்லிம் லீக்கின் உலமாக்கள் அணி தலைவர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்களுடனும் சந்திப்பு நடைப்பெற்றது. இரண்டு ஹஜ்ரத்களிடமும் பொதுச்செயலாளர் அவர்கள் நீண்ட காலமாக தனிப்பட்ட தோழமையோடு பல்வேறு ஆலோசனைகளை பெற்றுவருவது குறிப்பிடதக்கது. இன்று லால்பேட்டையில் (கொள்ளிமலை) மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார். லால்பேட்டையில் ஏராளமான இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். லால்பேட்டையில் ஏராளமான ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வருகை தந்து மஜக தலைவர்களுடன் கலந்துரையாடினர். லால்பேட்டை வருகை உற்சாகமளிக்கும் வகையில்