பஹ்ரைன் மண்டல மஜக கருத்தரங்கம்…

image

image

ஜன.28.,பஹ்ரைன் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் “மோடி சொன்னதும் – செய்ததும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் மிக மிக அருமையான முறையில் 27-01-2017 அன்று சவுத் பார்க் ஹோட்டலில் மண்டல செயலாளர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டல துணை செயலாளர் சாவண்ணா, மண்டல ஆலோசகர் ஆரிப், மருத்துவ சேவை அணி செயலாளர் வசீம் ராஜா, தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் சுபகான், செயற்குழு உறுப்பினர்கள் அலாவுத்தீன், சாகுல் ஷா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்தினர். இறுதியாக மண்டல பொருளாளர் மன்னை அலி நன்றி கூறினார்.

தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி,
பஹ்ரைன் மண்டலம்.
27.01.17