சிங்கப்பூர் தூதரக இரங்கல் குறிப்பில் மஜக பொதுச்செயலாளர் இரங்கல் !

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன் அவர்களின் மறைவை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திற்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார்.

அங்கு தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில்,”சிங்கப்பூர் தனது மூத்த குடிமகனை இழந்துவிட்டது என்றும்,பன்னாட்டு தமிழ் சமுதாயம் தனது மதிப்புமிக்க புதல்வரை இழந்துவிட்டது “என்றும் தனது இரங்கலை பதிவு செய்தார்.

அங்கிருந்த தூதரக அதிகாரி ROY KHO அவர்களிடமும் தனது இரங்கலை நேரில் தெரிவித்தார்.

பொதுச்செயலாளருடன்,கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, சிங்கப்பூர் சமூக சேவகரும்,FIM மற்றும் TMAS அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான தீன் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டனர்.

தகவல்;

மஜக ஊடகப் பிரிவு (சென்னை)