நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வளத்தூர்(1), பள்ளிகொண்டான்(1), குடியாத்தம்(2), திருப்பத்தூர்(1), ஓசூர்,கிருஷ்ணகிரி(9), விழுப்புரம்(1) ஆகிய அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 905 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு கோரிக்கையை ஏற்று செயல்படுத்தி தந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா மற்றும் மஜக சார்பில் நன்றிகள் பல... தகவல் : மாணவர் இந்தியா ஊடக பிரிவு, தலைமையகம் சென்னை. 07.03.2017
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
நெடுவாசல் போராட்டக்களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி…
புதுகை.மார்ச்.02., புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டக்களத்திருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகைதந்து ஆதரவு தெரிவித்தார்கள். அவரை போராட்டக் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் பேசும்போது அவரது கருத்தை வரவேற்று அடிக்கடி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆதரவு குரல் கொடுத்து முழக்கங்கள் எழுப்பினர். இன் நிகழ்வை தொலைக்காட்சிகள் நேரலைலாக ஒளிபரப்பினர். நெடுவாசல் ஊர் முழுக்க மத்திய மோடி அரசிற்கு எதிராக கூக்குரல் எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது. சாரை சாரையாக ஆண்களும் , பெண்களும் மத்திய அரசிற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியபடியே வந்துகொண்டிருக்கின்றனர், வருகை தரும் அனைவரையும் ஊர்மக்கள் சார்பில் ஒரு குழு கைக்கூப்பி வரவேற்த்துக்கொண்டே இருக்கிறது. வருபவர்களுக்கு ஊர் மக்களே சமையல் செய்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கிராமம் முழுவதும் எழுச்சியாக இருக்கிறது. தமிழன் என்ற முழக்கமும், மண்ணை காப்போம் என்ற முழக்கமும் எங்கும் எதிரொலிக்கிறது. இப்போராட்ட களத்திற்கு பொதுச் செயலாளருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா,
மஜகவின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை…
வேலூர்.பிப்.22., கடந்த 20.02.2017 அன்று வேலூர் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாதததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் விளைவாக நேற்று (21.02.2017) விடியற்காலை 6.30. மணியளவில் 3ஆம் மண்டல மாநகராட்சி அதிகாரி மஜகவின் கோரிக்கை வைத்த இடங்களை பார்வையிட்டார். பார்வைக்கு பிறகு துப்புரவு பணியாளர்களை உடனே வரவைத்து குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். உடன்: மஜக களப்போராளிகள். தகவல்:மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING). வேலூர் கிழக்கு மாவட்டம். (22.02.2017)
பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை : அரசு நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடி மஜக கோரிக்கை…
வேலூர்.பிப்.21., நேற்று 20-02-2017 திங்கள் கிழமை வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. அதை வாங்கிய நபர் அதை விற்ற கடையின் உரிமையாளரிடம் ஏன் இப்படி மக்கள் உடலை கெடுக்ககூடிய பிளாஸ்டிக் முட்டையை விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த கடையின் உரிமையாளர் அந்த நபரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் துன்புறுத்தியுள்ளார். இதை அறிந்த மஜக மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசீம் அக்ரம் இதை அனைத்து கடைகளில் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்றும் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் மேலும் சீனா முட்டைகள் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதிப்பவர்கள் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது இப்படியே தொடருமானால் மஜக சார்பில் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் நபரை தாக்கிய கடையின் உரிமையாளர் மீது உடனடியாக காவல்துறை கைது செய்யது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) வேலூர் மாவட்டம். 21.02.17
சிறைவாசிகள் மீதான தொடரும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு!
பிப்.09., கடலூர் மத்திய சிறையில் தொடரும் சிறைவாசிகளின் மீதான வன்முறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 07-02-2017 அன்று காலை கடலூரில் நடைபெற்றது. இதில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி மனித உரிமைகள் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைக்கழக பேச்சாளார் கடலூார் S.மன்சூர், மஜக மாவட்ட செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி P. ஷாஜகான் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக மாவட்ட மீனவர் அணி செயலாளர் யூசப், நெல்லிக்குப்பம் மஜக நகர செயலாளர் அப்துல் பாஸித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கடலூர் மாவட்டம் 08-02-2017