சிறைவாசிகள் மீதான தொடரும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு!

image

image

பிப்.09., கடலூர் மத்திய சிறையில் தொடரும் சிறைவாசிகளின் மீதான வன்முறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 07-02-2017 அன்று காலை கடலூரில் நடைபெற்றது.

இதில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி மனித உரிமைகள் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைக்கழக பேச்சாளார்
கடலூார் S.மன்சூர், மஜக மாவட்ட செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி P. ஷாஜகான் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக மாவட்ட மீனவர் அணி செயலாளர் யூசப், நெல்லிக்குப்பம் மஜக நகர செயலாளர் அப்துல் பாஸித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
கடலூர் மாவட்டம்
08-02-2017