தஞ்சை. ஏப்.16., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (16.04.17) மாலை 7.00 மணியளவில் குடந்தை அனஸ் ரெஸ்டாரெண்ட்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நீதி போதனையாற்றினார். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் மத்திய மோடி அரசை கண்டித்து எதிர்வரும் 19.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு குடந்தையில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மஜக விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து கூறினார்கள். மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் ரயில் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள் அதனை தொடர்ந்து ஏப்ரல்.30 அன்று சோழபுரம் பொதுக்கூட்டம் அழைப்பு பணிகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் நன்றி உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு 16.04.2017.
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
டாஸ்மார்க் கடைய அகற்றக்கோரி மஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்மார்க் கடையை அகற்ற கோரியும், இனி வரும் காலங்களில் பொன்பேத்தி கிராமத்திற்க்குல் டாஸ்மார்க் வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, சையது அபுதாஹீர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமின், நகர பொருளாளர் ஜகுபர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பாஷித் கான், மேற்கு மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன்,
தஞ்சையில் அனைத்து கட்சியின் ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில விவசாய அணி செயலாளர் பங்கேற்பு..!!
தஞ்சை.ஏப்.11., காவேரி நதிநீர் உரிமையை மீட்க, விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மாணவர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டார்கள். உடன் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை மாவட்டம். 11.04.2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் தொடர்முழக்க போராட்டம்…
திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்துவதை கண்டித்தும் தொடர் முழக்க போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் போகம்பூர் திப்பு திடலில் காலை 11மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜகவின் மாநில துணை செயலாளர் திண்டுக்கல். M.அன்சாரி, கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி .சாந்து முகம்மது, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர்கள் A.ஹபிபுல்லா(இரயில்வே), உமர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் T.முகமது பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர் T.மரிய மனோஜ் ஆகியோர் தலைமையில் மாணவர் இந்தியா நகர செயலாளர் M.தினேஷ் சக்திபாலன், நகர துணை செயலாளர் M.முனாப் தீன், நகர பொருளாளர் S.உமர் முக்தார் ஆகியோர் முன்னிலைவகித்தனர், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் A.முகமது நவ்ஃபல் வரவேற்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், சமுக ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மத்திய அரசை கண்டித்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1. தமிழகத்தில் அமல்படுத்த
நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை 01/04/2017 சனிக்கிழமை டெல்லி புறப்படுகிறார். காலை புறப்பட்டு செல்லும் அவர் நாளை மதியம் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை சந்திக்கிறார். தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தலைமையகம்.