தஞ்சை.அக்.23., தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நேற்று 22-10-2017ல் நடைபெற இருந்தது. அறிவித்தபடி காலை பத்து மணிக்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் அண்ணா சிலை அருகில் கூடி மதுக்கடையை முற்றுகையிட கூட்டமாக செல்ல முழக்கமிட்டபடி இருந்தனர். அங்குவந்த வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வரும் 27.10.2017 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரை முற்றுகைப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம் அவர்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா), தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரசு. நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழைக்கும் மக்கள் கட்சி, கிறித்தவ நல்லெண்ண இயக்கம், சாமானிய சகாக்கள் சங்கம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
சேலத்தில் டெங்குவால் சிறுமி உயிரிழப்பு மஜகவினர் சாலை மறியல்..!
சேலம்.அக்.06., சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கலை சேர்ந்த 7 வயது சிறுமி பல்கீஸ் என்பவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் நிலைமை மிகவும் மோசமானது. இதை அறிந்த சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் விரைந்து சென்று மருத்துவமனை தலைமை அதிகாரியை சந்தித்து பேசியும் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் அதை தொடர்ந்து மஜக தலைமையில் இன்று மதியம் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாட்ஷா தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் A.மெஹபூப் அலி, OS. பாபு, மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்லம், தொழிற்சங்க செயலாளர் சதாம், பொருளாளர் சதாம் உசேன், வர்த்தக அணி செயலாளர் முகம்மது அலி மற்றும் மஜக மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்ததின் பேரில்ஆட்சியர் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாநகர்_மாவட்டம் 06-10-2017
மஜகவின் தொடர் முயற்சியால் இளையன்குடியில் சமுத்திர ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது..!!
சிவகங்கை.செப்.23., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீர் நிலைகளை தூர்வார கோரிய தொடர் முயற்சியின் பயனாக சமுத்திர ஊரணியை தூர்வாரும் பணி நேற்று இனிதே துவங்கியது. நிலத்தடி நீர்குறைந்த இளையான்குடி நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக நீர்நிலைகளை மாசுபடுத்தும் காட்டுகருவேல மரங்களை அப்புரப்படுத்தும் முயற்சியில் பெரியகண்மாயின் கரைகளில் உள்ள காட்டுகருவேல மரங்களை தூரோடு அகற்றும் பணியினை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அரசின் உதவியுடன் அகற்றியது. நகரின் மத்தியில் உள்ள புதர்மண்டி கிடந்த தெய்வபுஸ்ப ஊரணியை சுத்தம் செய்ய அரசை வலியுறுத்தி டெண்டர் பெற்று சமூக ஆர்வலர் தப்பாத்தை சாகுல் அவர்களுக்கு உதவியது. அதன் தொடர்ச்சியாக மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தொடர் முயற்சியின் காரனமாக கண்மாய்கரை சமுத்திர ஊரணியை சமூக ஆர்வலர்களின் பொருளாதார உதவியுடன் தூர்வார சிவகங்கை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுந்தர மூர்த்தி அவர்களும், மஜக தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா.முகம்மது நாஸர் அவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊரணி தூர்வாரும் நிகழ்சியில் கூட்டுறவு நகர வங்கி தலைவரும் முன்னால்
ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழர்கள் திரண்டனர்..!
சென்னை.செப்.22., இன்று சென்னையில் மியான்மர் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான தமிழர்கள் சென்னையில் அணிதிரண்டனர். கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை முழுவதும் மூன்று கட்சிகளின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. ரோஹிங்ய மக்களின் கண்ணீரை கூறும் துண்டு பிரசுரங்கள் ஆங்காங்கே விநியோகிக்கப்பட்டன. இதனால் இன்று மதியம் 4 மணி முதலே போராட்டம் நடைபெற்ற துறைமுகம் பகுதியில் கட்சி சார்பற்ற பொதுமக்கள் குழுமத் தொடங்கினர். பாரி முனை எங்கும் மூன்று கட்சிகளின் கொடிகள் ஒன்றுமையை பறை சாற்றும் விதமாக கம்பீரமாக பறந்து அனைவரையும் வரைவேற்றுக் கொண்டிருந்தது. 4:30 மணிக்கெல்லாம் காஞ்சி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை சேர்ந்த மஜகவினர் வாகனங்களில் ரோஹிங்ய மக்களுக்கு ஆதரவாக முழக்க மிட்டபடியே பாரிமுனை பகுதியில் நுழையத் தொடங்கினர். அதுபோல கொங்கு இளைஞர் பேரவையினரும், முக்குலத்தோர் புலிப்படையினரும் " நமது மாமன் - மச்சான்களுக்கு குரல் கொடுப்போம்" என்ற முழக்கங்களோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பியப்படியே அலை, அலையாய்
மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் நிலையம் முற்றுகை…!
திருச்சி.செப்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) திருச்சி மாவட்டம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் #இப்ராம்ஷா தலைமையில், சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், மாணவர் இந்தியா அமைப்பாளர் மைதீன் அப்துல் காதர், தொழில் சங்கம் அணி G.K.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான், இளைஞர் அணி சதாம், மற்றும் அரியமங்கலம், ஆழ்வார் தோப்பு, காட்டூர், நத்தர்ஷா தர்கா, காஜாமலை, வரகனேரி கிளை செயலாளர்கள், பொருளாளர்கள், துணை செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர். இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிரிப்பை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருச்சி_மாநகர்_மாவட்டம். 15.09.2017