கோவை.செப்.02., கோவை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்தும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக் மற்றும் அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரத்தில் முடிவுசெய்து ஏராளமான மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தகவல்: #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு #கோவை_மாநகர்_மாவட்டம் 02.09.17
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தில் மஜகவின் முப்பெரும் விழா..!
திருப்பூர்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் D.காளிபாளையத்தில் நேற்று மாலை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு, தெருமுனை பிரச்சாரம் கொடியேற்றுவிழா ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மஜக மாவட்ட செயலாளர் திருப்பூர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகிக்க, இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மஜக மாநில செயற்குழு உறுப்பினர் பெங்களூர் K.M.J.பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்ததாக உரையாற்றிய திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள். நெருப்பில் பூத்த புரட்சி மலராம் மஜக தோன்றிய காரணங்களையும், அது குறுகிய காலத்தில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று வெற்றி வாகை சூடி வருவதையும் எடுத்துரைத்தார். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தாராபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். கொடியேற்றம் நிகழ்வு ஊர்பெரியவர்கள் முன்னிலையில் ஊரின் முக்கிய சந்திப்பில் பொதுமக்களின் ஆதரவோடு கரவொலிக்களுக்கு மத்தியில் மாவட்ட செயலாளர் ஹைதரலி அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். அதன் பின் நடந்த நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் D.காளிபாளையம் கிளை நிர்வாகிகள் நியமனம்
மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!
கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 1.மஜக மாவட்டநிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, 2.நீட் தேர்வுவிவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாணவர் இந்தியா சார்பாக 1000கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவது என தீர்மானிக்கப்பட்டது, 3.அணி நிர்வாகங்களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது, 4.பகுதி மற்றும் நகர கிளை நிர்வாகங்களை மாவட்ட நிர்வாகம் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைசெய்வது என தீர்மானிக்கப்பட்டது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 29.08.17
திருப்பூரில் மாணவர்களை ஈர்த்த மாணவர் இந்தியா..!
திருப்பூர்.ஆக.28., திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்களான கெளசிதன், கார்த்திக், அஜாஸ், அஸ்கர் ஜபார் ஆகியோர் மாணவர்கள் உரிமைக்கான போராட்டங்களில் சமரசம் செய்யாமல் போராடும் மாணவர் இந்தியா அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டனர்.. தகவல்; மாணவர் இந்தியா ஊடக பிரிவு திருப்பூர் மாவட்டம் 27-08-2017
நீட் தேர்விற்கெதிராக ஓமந்தூரார் தோட்டத்தை முற்றுகையிட்ட மாணவர் இந்தியாவினர் கைது..!
சென்னை.ஆக.27., சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில கல்வி உரிமைக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையும் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்று வருகின்றது. நீட் தேர்விற்கு எதிராகவும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்தும் ஓமந்த்தூரார் தோட்டம் முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர் முற்றுகை போராட்டம் இன்று காலை நடைபெற்று ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இப்போரட்டத்திற்கு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் தலைமை தாங்கினார், உடன் மாநில பொருளார் A.ஜாவித் ஜாபர், மாநில துணைச் செயலாளர்களான SG.அப்சர் சையத், S.பஷிர் அஹமத் மற்றும் மாவட்ட நிர்வாகிகளான N.கபிர் அஹ்மத், I.அலாவுதீன், KM.அன்வர் இஸ்மாயில் , V.ரமேஷ், ஊடக பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டு கைதாகினர். இப்போரட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மஜக-வின் மாநில செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பங்கேற்றார். தகவல்; ஊடகபிரிவு, மாணவர் இந்தியா தலைமையகம், சென்னை 27.08.17