திருச்சி.மார்ச்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொருளாளர் அஷ்ரப் அலி துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ஜம்ஜம் பஷீர், ரபீக், காட்டூர் பஷீர் ஆகியோர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மைதீன், தொழில்சங்க மாவட்ட செயலாளர் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி சேட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.. #தீர்மானங்கள் 1.மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிளைகளில் கொடியேற்றி சிறப்பிப்பது எனவும், 2.கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது எனவும், 3.மிக விரைவில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஏக மனதாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WINK திருச்சி மாவட்டம் 24.03.17
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா கோரிக்கை ஏற்று சாலை அமைப்பு…
சென்னை.மார்ச்.16., வடசென்னை புளியந்தோப்பு இராமசாமி தெருவில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையால் மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வந்தனர். மக்களின் இன்னல்களை அறிந்து அப்பகுதியில் வசித்து வரும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தீன் "அம்மா புகார் மையம்" தொலைபேசி எண்: 1100 தொடர்பு கொண்டு சாலை இல்லாமல் மக்கள் படும் இன்னல்களை விவரித்து புகாரை பதிவு செய்தார். புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு சாலையின் விவரங்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைத்து மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துவிட்ட தகவலை பதிவு செய்தனர். புகார் பதிவு செய்து ஒரு வார காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா சார்பாக தீன் நன்றியை தெரிவித்தார். தகவல் : ஊடகபிரிவு. மாணவர் இந்தியா, வடசென்னை மாவட்டம். 16.03.2017 #Maanavar_India
JNU மாணவர் முத்துகிருஷ்ணன் மர்ம மரணம் – மாணவர் இந்தியா கண்டனம்…
புது தில்லி JNU பல்கலைகழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிர்ழந்ததின் பின்னணியில் அனைத்து தரப்பினராலும் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது. ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வேமுலா, எய்ம்ஸ் பல்கலைகழக மாணவர் சரவணன், என மத்திய பல்கலைகழகத்தை சேர்ந்த சிறுபான்மை மற்றும் தலித் மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழப்பதும். காணலாம் போய் 4மாதங்கள் ஆகியும் ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர் நஜிப் அஹமது இது வரையில் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதை மாணவர் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கடைசியாக பேராசிரியர்களும் சாதி வேறுபாடு பார்ப்பதாகவும், பல்கலைகழக சேர்க்கையில் சம அளவிலான வாய்ப்புகள் பின்பற்றப்பட்டவில்லை என்பதை பதிவு செய்துள்ளார், ரோஹித் வெமுலா படுகொலையை தொடர்ந்து முத்துகிருஷ்ணனின் மர்ம மரணம் பாஜக மற்றும் ஏ.பி.வி.பி அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. கல்வி பயிலும் மாணவர்கள் மதம் மற்றும் சாதி ரீதியிலான துன்பத்திற்கு ஆளாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது. பல்கலைகழக சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும், தற்கொலைக்கான உண்மையான காரணத்தை
முத்துகிருஷ்ணன் தாயாருக்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…
சேலம்.மார்ச்.15., டெல்லியில் நேற்று சேலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அறித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று மாலை சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள முத்து கிருஷ்ணன் இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். தலித் மாணவர்கள் மீது நவீன தீண்டாமை தற்பொழுது வட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உருவாகியுள்ளது எனவும், இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும், முத்து கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ மூலம் நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும் என்றும், அதுவரை அனைத்து தோழமை சக்திகளுடன் இணைத்து மஜக பேராடும் என்றும் உறுதியளித்தார். மேலும், மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய அதிகப்படியான இழப்பீட்டு தொகையினை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் வாயிலாக சட்டமன்றத்தில் பேசி பெற்றுதருவதாகவும் மாணவரின் குடும்பத்தினரிடம் வாக்குறுத்தியளித்தார். இதில் சேலம் மாவட்டச் செயளாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் S. சைய்யத் முஸ்தபா, A.ஷேக்ரஃபிக், O.S.பாபு, A.அம்ஷத்
JNU பல்கலைக்கழக மாணவர் தற்கொலை- முத்துகிருஷ்ணன் இல்லத்தில் மாணவர் இந்தியா…
சேலம்.மார்ச்.14., சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் JNU பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட உண்மை நிலை அறிய மாணவர் இந்தியா சேலம் மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர் பியாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர் முத்துகிருஷ்ணன் அவர்களது இல்லத்திற்க்கு சென்றனர். பெரும் சோகத்தை சூழ்ந்துகொண்ட சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் முத்துகிருஷ்ணனின் அண்ணனிடம் நடந்த விபரங்களை கேட்ட பொழுது தன் தம்பி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறினார்.மேலும் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை,தலித் மாணவர்களின் சுயமாரியாதைக்கு என்றும் பாதுகாப்பு இல்லை என்று முத்துகிருஷ்ணனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முத்துகிருஷ்ணனின் தற்கொலையில் நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா போராடும் என்று ஆறுதல் கூறினர். இச்சந்திப்பில் பாபு, சதாம், அம்ஜத்,சாந்த் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: ஊடக பிரிவு, மாணவர் இந்தியா, சேலம் மாவட்டம். #Maanavar_India