நாகை. ஜூலை.25., நேற்று மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் சந்தித்து பேசினார். தன் தந்தை மறைவை அடுத்து சிறையிலிருந்து பிணையில் வந்துள்ள பேராசிரியரை, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவுறுத்தலில் பேரில் நாகை வடக்கு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறியதுடன் தற்போதைய சூழலை பற்றி அறிந்துகொண்டனர். பேராசிரியர் விடுதலை சம்மதமாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ம.ஜ.க பொதுச் செயலாளர் குரல் கொடுத்ததையும், கூடியவிரைவில் விடுதலை அடைய வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டு விடைப்பெற்றனர். அப்போது பேசிய பேராசிரியர் ஜெயராமன் "எனக்காக சட்டமன்றத்தில் பேசிவரும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி M.L.A. அவர்களை கேட்டதாக சொல்ல சொன்னதுடன் துடிப்பான இளைஞர்கள் தான் எதையும் சாதிக்க முடியும் என்றும்: அந்தந்த பகுதியில் மக்கள் போராடி வெற்றிபெற வேண்டுமென்றும் சொன்னார். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING நாகை வடக்கு 24_07_17
Author: admin
வேலூரில் ஆதி ஆந்திர அருந்ததியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் : மஜக பங்கேற்பு
வேலூர்.ஜூலை.24., இன்று காலை 10 மணியளவில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிரந்தர வீட்டு மனை பட்டா விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாவட்ட அமைப்புக்குழு தலைவர் முகம்மது ஜாபர் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மஜக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபீக் ரப்பணி, நுருல்லாஹ், முகம்மது யாசின், ஆகிய நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ்நாடு ஆதி ஆந்திரா மகா சபை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, வேலூர் கிழக்கு மாவட்டம். #MJK_IT_WING 24.07.2017
காஞ்சி வடக்கு மாவட்டம் முடிச்சூாில் மஜக கிளை உதயமானது…
காஞ்சி.ஜூலை.23., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முடிச்சூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்கப்பட்டது. மேலும் மாநில செயலாளர் N.A.தைமியா அவா்களின் மேற்பாா்வையில், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதாா் அவா்கள் ஆலோசனையின் படி, மாநில் செயற்குழு உறுப்பினா் மன்னிவாக்கம் யூசுப் அவா்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் மற்றும் மாவட்ட துணை செயலாளா் ஜாகீா் உசேன் அவா்களின் முன்னிலையில் முடிச்சூா் லக்ஷ்மி நகாில் 20கும் மேற்பட்ட இளைஞா்கள் மஜக-வில் தங்களை இணைத்து கொண்டாா்கள். மன்னிவாக்கம் யூசுப் அவா்களும் மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் ஆகியோர் கட்சியின் கோட்பாடுகளை பற்றி சிற்றுரையாற்றினா்கள். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING காஞ்சி வடக்கு மாவட்டம் 23.07.2017
மஜக திருவள்ளூர் (கி) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
சென்னை.ஜூலை.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (22.07.17) அன்று திருவொற்றியூரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உடனடியாக கிளைகளை கட்டமைப்பது எனவும், கிளைகள் உள்ள அனைத்து இடங்களிலும் மஜக கொடி மற்றும் பெயர் பலகை திறப்பது எனவும், விரைவில் மாவட்டத்திற்க்கு உட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் S.M.நாசர், மாவட்ட பொருளாளர் L.ஜாபர் சாதிக், மாவட்ட துணை செயலாளர் A.கரிமுல்லா, மாவட்ட துணை செயலாளர் IKP A.S.தாரிக் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருவள்ளுவர் (கி) மாவட்டம். 22.07.2017.
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.3.39இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…
நாகை.ஜூலை.23., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.3.39 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை ஊராட்சி ஒன்றியம் பொரவாச்சேரி உராட்சிக்கு உட்பட்ட புதுதெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 3.39 லட்சம் மதிப்பீடு கொண்ட சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 23/07/2017