திருவாரூர்.செப்.18., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் கடந்த 13ஆம் தேதி சக நண்பனால் கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன் முகம்மது மாஜித் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொலையான மாஜிதின் தந்தை K.P.N. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு கொலை நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டவர் கொலை சம்பவங்களை கேட்டறிந்தார். இக்கொலை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினார். இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், கிளை நிர்வாகி சாதிக், ராஷித், சமீர் அப்துல் ரஹ்மான், நாச்சிகுளம் ரசீத், முத்துப்பேட்டை நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முகம்மது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம் 18/09/2017
Author: admin
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்! தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை! மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை) அதிமுக இரண்டு அணியாக செயல்படும் நிலையில்,TTV தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர் ,இதுபோல தான் நடவடிக்கை வரும்"என்று சொல்லியிருந்தார்.அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 MLA க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை, அதிமுகவின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக செயல்பட்டார்கள். இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்_20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது. #ஜனநாயக_படுகொலையாகும். மத்திய அரசையும், ஆளுனரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். #கூடா_நட்பு_கேடாய்_முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும்,தமிழக அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18_09_17
முஸ்லிம் பகுதிகள் மீது பாஜகவினர் வன்முறை..! பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மஜக பொதுச்செயலாளர்…!!
புதுகை.செப்.17., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் முத்துக்குடாவில் கடந்த இரு தினங்கள் முன்பு முஸ்லீம்கள் வாழும் பகுதியில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர், அப்பகுதிகளை நேற்று இரவு மஜக பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தகவல் அறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உடனே அப்பகுதிக்கு வருகைதந்தார்கள், அவர்களிடம் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்களுக்கு பக்கம் விகைவித்த 17போரையும் உடனே கைது செய்யும்படியும், இனி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கும் காவல்துறை இன்னும் அப்பகுதியில் கவனம் செலுத்தும்படியும் உயர் அதிகாரிகளிடம் தாம் கூறிக்கொள்கிறேன் எனவும் மஜக பொதுச் செயலாளர் கூறினார்கள். இதில் மஜக மாநில துணை செயலாளர் சேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் ஒலி முகம்மது, அரசை அபுதாஹிர், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அப்சல்கான், முத்துக்குடா கிளை செயலாளர் சம்சுதீன், அரசனகரி கிளை செயலாளர்
மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் நிலையம் முற்றுகை…!
திருச்சி.செப்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) திருச்சி மாவட்டம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் #இப்ராம்ஷா தலைமையில், சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், மாணவர் இந்தியா அமைப்பாளர் மைதீன் அப்துல் காதர், தொழில் சங்கம் அணி G.K.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான், இளைஞர் அணி சதாம், மற்றும் அரியமங்கலம், ஆழ்வார் தோப்பு, காட்டூர், நத்தர்ஷா தர்கா, காஜாமலை, வரகனேரி கிளை செயலாளர்கள், பொருளாளர்கள், துணை செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர். இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிரிப்பை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருச்சி_மாநகர்_மாவட்டம். 15.09.2017
தோப்புத்துறையில் மியான்மர் அரசின் இனப்படுகொலைக்கு எதிராக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
நாகை.செப்.15., நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் ரோஹிங்யா முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் ஐநா சபை தலையிட்டு மியான்மர் அரசு மீது கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும், இந்திய அரசு ரோஹிங்யா அகதிகளை அரவணைக்க வேண்டும் என வலியுறுத்தி #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் தலைமை வகிக்க நாகை மாவட்ட துணைச் செயலாளர் சேக் மன்சூர், வேதை நகரச் செயலாளர் சேக் அஹமத்துல்லா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் மஜக அவைத் தலைவர் மவ்லவி #நாசிர்_உமரி அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர் ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேதை நகரம் (நாகை தெற்கு மாவட்டம்) 15_09_17