நாச்சிகுளத்தில் கொலையான சிறுவனின் இல்லத்தில் மஜக பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்…!

image

image

திருவாரூர்.செப்.18., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் கடந்த
13ஆம் தேதி சக நண்பனால் கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன் முகம்மது மாஜித் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொலையான மாஜிதின் தந்தை K.P.N. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு கொலை நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டவர் கொலை சம்பவங்களை கேட்டறிந்தார்.

இக்கொலை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினார்.  இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், கிளை நிர்வாகி சாதிக், ராஷித், சமீர் அப்துல் ரஹ்மான், நாச்சிகுளம் ரசீத், முத்துப்பேட்டை நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முகம்மது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாச்சிகுளம்
18/09/2017