தோப்புத்துறையில் மியான்மர் அரசின் இனப்படுகொலைக்கு எதிராக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

image

image

image

நாகை.செப்.15., நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் ரோஹிங்யா முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் ஐநா சபை தலையிட்டு மியான்மர் அரசு மீது கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும், இந்திய அரசு ரோஹிங்யா அகதிகளை அரவணைக்க வேண்டும் என வலியுறுத்தி #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் தலைமை வகிக்க நாகை மாவட்ட துணைச் செயலாளர் சேக் மன்சூர், வேதை நகரச் செயலாளர் சேக் அஹமத்துல்லா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.

இதில் மஜக அவைத் தலைவர் மவ்லவி #நாசிர்_உமரி அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர் ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேதை நகரம் (நாகை தெற்கு மாவட்டம்)
15_09_17