முஸ்லிம் பகுதிகள் மீது பாஜகவினர் வன்முறை..! பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மஜக பொதுச்செயலாளர்…!!

image

image

image

புதுகை.செப்.17., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் முத்துக்குடாவில் கடந்த இரு தினங்கள் முன்பு முஸ்லீம்கள் வாழும் பகுதியில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்,  அப்பகுதிகளை நேற்று இரவு  மஜக பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உடனே அப்பகுதிக்கு வருகைதந்தார்கள், அவர்களிடம் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்களுக்கு பக்கம் விகைவித்த 17போரையும் உடனே கைது செய்யும்படியும், இனி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கும் காவல்துறை இன்னும் அப்பகுதியில் கவனம் செலுத்தும்படியும் உயர் அதிகாரிகளிடம் தாம் கூறிக்கொள்கிறேன் எனவும் மஜக பொதுச் செயலாளர் கூறினார்கள்.

இதில் மஜக மாநில துணை செயலாளர் சேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் ஒலி முகம்மது, அரசை அபுதாஹிர், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அப்சல்கான், முத்துக்குடா கிளை செயலாளர் சம்சுதீன், அரசனகரி கிளை செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட மஜக மாவட்ட, ஒன்றிய, நகர், கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுகை_கிழக்கு_மாவட்டம்
17.09.17