தொண்டி. டிச.30., இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் சீனி முகம்மது,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.M.ஹாரிஸ், மாநில செயற்குழு உறுப்பினர் MMH.முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்களின் அறிவுறுத்தளின் படி, மாவட்ட துணை செயலாளர் முகம்மது, வர்த்தகரணி செயலாளர் இப்னு சூது, மாவட்ட விவசாய அணி ராஜா ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளராக சுல்தான், பொருளாளராக முகம்மது ரபீக், துணை செயலாளர்களாக செய்யது அன்சாரி, நல்ல இப்ராஹீம் பாதுஷா ஆகியோர் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சீனி முகம்மது முன்னிலையில் ஏராளமானோர் மஜகவில் இணைந்ததனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு
Author: admin
காரைக்காலில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!
காரைக்கால்.டிச.29., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 29.12.2017 காரைக்கால் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக மாவட்ட செயலாளர் A.R. பாவா பஹ்ருதீன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட துனை செயலாளர் ஹாஜா பகுருதீன், டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காரைக்கால்_மாவட்டம்
வேலூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!
வேலூர்.டிச.29., வேலூர் கிழக்கு மாவட்டம் முன்னாள் இளைஞரணி செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 29/12/17 வேலூரில் தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MA.MLA., மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.COM., தலைமை ஒருங்கிணைப்பாளர் மொளலா நாசர், மாநில அவைத்தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் J.S.ரிஃபாயி, மாநில துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜூத்தீன், சாதிக் பாட்ஷா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், வசீம்அக்ரம், இளைஞரனி மாநில பொருளாளர் மன்சூர்அகமத், மாநில இளைஞரனி துணை செயலாளர் N.அன்வர் பாஷா, மாணவர் இந்தியா மாநில துனை செயலாளர் அப்சர் சைய்யத், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துனை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅபுதாஹிர், மேலும் வேலூர் கிழக்கு மாவட்ட பொருப்புகுழு நிர்வாகிகள் முஹம்மது ஜாபர், முஹம்மது வசீம், முஹம்மத் யாசீன், ஜாஹிர் உசேன், முஹம்மது யாசின், சையது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் செயலாளர்
கூத்தாநல்லூரில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்..! மஜக பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்..!!
திருவாரூர்.டிச.29., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடையான "பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்" கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு (KEO) மூலம் கொண்டு வரப்படுகிறது. அதனை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பணம் வாங்கும் மனநிலை கொண்ட வாக்காளர்கள் நிறைந்து விட்ட அரசியல் உலகில் முற்போக்கு முயற்சிகள், புரட்சி சிந்தனைகள் எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டன. அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லோரும் இதில் சிக்கி விட்ட நிலையில் KEO போன்ற தொண்டு நிறுவனங்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், சமூக இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், பிற சமூக மக்களோடு நல்லுறவை மேலும் வலிமைப்படுத்த ஜமாத்துகள் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், ஜும்மா மேடைகளை ஆலிம்கள் விழிப்புணர்வுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலகளுக்கும், சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மஜக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், நெறியாளர் ஜம் ஜம் சாகுல், KEO நிர்வாகிகள் N.A.ஜாருல்லாஹ், செயலாளர் KNR, N.M.தாஹிர் செயலாளர்
முத்தலாக் மசோதா தாக்கல்..! மத்திய அரசுக்கு மஜக கடும் கண்டனம்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை! ) முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் மசேதாவை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம். இதை ஒரு குற்றவியல் வழக்காக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முஸ்லீம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிடுவதாகும். இவ்விசயத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க கூடாது என வலியுருத்தியதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை . முத்தலாக் விசயத்தில் முஸ்லீம் பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில் அதை கையாள்வோம் என்று ஜமாத்துகளும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் சொல்லிய பிறகும் மத்திய அரசு இவ்விசயத்தில் பிடிவாதம் பிடிப்பபதை ஏற்க முடியாது. மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பபெற வேண்டும். அல்லது அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தோடு கலந்து ஆலோசித்து உரிய திருத்தங்களோடு கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, AIIM தலைவர் அசாதுதீன் உவைசி, ராஸ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் JPN யாதவ், முஸ்லிம்லீக்கை