கூத்தாநல்லூரில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்..! மஜக பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்..!!

image

image

image

திருவாரூர்.டிச.29., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடையான “பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்” கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு (KEO) மூலம் கொண்டு வரப்படுகிறது.

அதனை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

பணம் வாங்கும் மனநிலை கொண்ட வாக்காளர்கள் நிறைந்து விட்ட அரசியல் உலகில் முற்போக்கு முயற்சிகள், புரட்சி சிந்தனைகள் எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டன. அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லோரும் இதில் சிக்கி விட்ட நிலையில் KEO போன்ற தொண்டு நிறுவனங்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், சமூக இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், பிற சமூக மக்களோடு நல்லுறவை மேலும் வலிமைப்படுத்த ஜமாத்துகள் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், ஜும்மா மேடைகளை ஆலிம்கள் விழிப்புணர்வுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலகளுக்கும், சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் மஜக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், நெறியாளர் ஜம் ஜம் சாகுல், KEO நிர்வாகிகள் N.A.ஜாருல்லாஹ், செயலாளர் KNR, N.M.தாஹிர் செயலாளர் (UAE), L.B.முஹம்மது மைதீன் துணைத் தலைவர் KNR, K.A. அமனுல்லாஹ் துணை செயலாளர் KNR, J.M.அப்துல்லாஹ் நசீம் நிர்வாகி KNR ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்
28.12.17