சென்னை.ஜூன்.23., இன்று சட்டப்பேரவை நடைபெற்றுக்கொண்டிருந்த போது எதிர்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் சந்தித்தனர். 14ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது குறித்தும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டும் இச்சந்திப்பு நடைபெற்றது. அதேபோல் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் K.P.ராமசாமி , முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர் MLA, ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டப்பேரவை வளாகம். #MJK_IT_WING 23.06.2017
Author: admin
ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு மஜக ஆதரவு.
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை) இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீராகுமார் அவர்களை தங்களின் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தூதர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் என்பதும், முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்பதும், இவர் தகுதிமிக்க வேட்பாளர் என்பதை நிரூபிக்கிறது. இந்திய அளவில் தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவரை குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரிப்பது என்று மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 23.06.2017
சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA ஆவேச முழக்கம்!
#மே17.திருமுருகன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்..! #சிறை நோயாளிகள் மீரான் மைதீன், அபூதாகிரை விடுதலை செய்ய வேண்டும்...! #MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வேண்டும்...! #மனசாட்சியை மூடி வைக்காதீர் என சக உறுப்பினர்களை பார்த்து உருக்கம்... #சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி ஆவேச முழக்கம்! (மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறைத்துறை மானிய கோரிக்கையில் 22.06.2017 அன்று பேசிய உரையின் சுருக்கம்) மண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... குண்டர் சட்டத்தை வாபஸ் பெறுக...! மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் உள்ளிட்ட அவ்வியக்கத்தை சேர்ந்த நால்வர் மீதும், மீத்தேன் திட்ட எடுப்புக்கு எதிராக போராடிய பேராசிரியர்.செயராமன் மீதும் போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்புச் சட்டத்தை இந்த அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ் தேசியவாதிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். பூந்தமல்லி சிறையில் இருந்து மற்றுக...! வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட மண்ணடி அப்துல்லாஹ் உள்ளிட்ட 16 கைதிகள் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காற்று வசதியற்ற மிகக் குறுகிய அறையில் 4பேர் வீதம் கொடூரமாக அடைக்கப்பட்டுள்ளனர். லாக்கப் நேரம் தவிர்த்து இதர நேரங்களில் இவர்கள் திறந்த வெளியில் நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களை உடனடியாக புழல் சிறைக்கு
காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் .!
மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதலமைச்சரிடம் கோரிக்கை .! சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி . கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் . அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் . இக்கோரிக்கையை ஏற்றுகொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் . தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தலைமை செயலகம் சென்னை. #MJK_IT_WING 22.06.2017
ஜனாதிபதி தேர்தலில் நாட்டு நலனை காக்கும் வகையில் செயல்படுவோம்.
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை) முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், இஃப்தார் நிகழ்ச்சி நடத்திய இரண்டு மணி நேரத்திற்குள் 'ஜனாதிபதி தேர்தலில் BJP வேட்பாளருக்கு ஆதரவு' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில் பேசிய முதல்வர் எடப்பாடியார் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக பயணிப்போம் என்றும் பேசினார். இப்படி பேசிய இரண்டு மணிநேரத்திற்குள் அவர் எடுத்திருக்கும் முடிவு அரசியல் அரங்கில் ஆழமான விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இது மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது என்பதில் ஐயமில்லை, இது அதிமுக தொண்டர்களின் மனநிலைக்கும் எதிரானது என்பது தான் உண்மை. இது அதிமுகவின் முடிவா ? எடப்பாடியாரின் முடிவா என்பதை எதிர்காலம் விளக்கும். இவ்விஷயத்தில் ஏற்கனவே அறிவித்த முடிவில் மஜக தெளிவாக இருக்கிறது. அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் எங்கள் ஆதரவு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சமயசார்பற்ற, சமூக நீதியை மதிக்கும் ஒருவருக்கே என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம். பதவிகளை விட எங்களுக்கு கொள்கைகளே முக்கியம். நாட்டு நலனை காக்க, சமூக நீதி சக்திகளுடன் இணைந்து இவ்விஷயத்தில் செயலாற்றுவோம். இவண். M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 22_06_17