குடந்தை ஏப்.21., காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஷிஃபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று 20/04/2018 மாலை 6.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை , நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மாநில செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று கண்டன கோஷங்கங்களை முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை வடக்கு 20.04.2018
Tag: Mjk
ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு அந்தியூரில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஈரோடு.ஏப்.20., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக #ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக தலைமையில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது. பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்திய படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹ்மத் பாரூக்,மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை பாரூக், நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி
சிறையில் சந்திப்பு…!
இன்று புழல் சிறையில் இரண்டாவது முறையாக #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது உள்ளிட்ட 7 மஜக சகோதரர்களையும் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சந்தித்தார். அவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோரும் உடன் சென்றனர். வழக்கு நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், மூவரும் எடுத்து கூறினர். அதற்கு அவர்கள் தலைமை எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை புரிந்து கொள்வதாகவும், யாரோ சிலர் சொல்லும் அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும், தாங்கள் இவ்விசயத்தில் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
நாகரீக அரசியலுக்கு உகந்ததல்ல…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து மறைமுகமாக ட்விட்டரில் பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா வெளியிட்ட கருத்து அநாகரீகத்தின் உச்சமாகும். கலைஞர் உடல் நலமின்றி, அரசியலிருந்து ஏறத்தாழ ஒதுங்கியிருக்கும் நிலையில் அவர் மீது தொடுத்திருக்கும் தனி நபர் தாக்குதல்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். அக்கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாகரீக வளர்ச்சியின் வழியாகவே, அரசியல் முதிர்ச்சியும், பண்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களும், தனி நபரை வீழ்த்த முன்னெடுக்கப்படும் தரங்கெட்ட முயற்சிகளும் பொது வாழ்வுக்கு எந்த விதத்திலும் சிறப்பு சேர்க்காது. கொள்கை ரீதியான விமர்சனங்கள் மட்டுமே, ஒருவரின் அரசியல் தரத்தை மதிப்பீடு செய்யும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.04.18
திண்டுக்கல்லில் எழுச்சியோடு நடைபெற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!
திண்டுக்கல்.ஏப்.18., இன்று மாலை 05-மணியலவில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு உரிமை மீட்புக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட பொருளாளர் M. அனஸ் முஸ்தபா அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் , #INLP, #விசிக, #கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்தேசிய அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும், பாசிச சக்திகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கை கண்டித்து பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம் 18/04/2018