தூத்துக்குடி.ஜூன்.06., இன்று 06:06:2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் VVD சிக்னல் அருகில் திமுக , கம்யூனிஸ்ட் வலது, கம்யூனிஸ்ட் இடது, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஆதிதமிழர் பேரவை, மமக, மமமுக, தாமக, இ.யூ.முஸ்லீம் லீக், ஆதிதமிழர் கட்சி ஆகிய அனைத்து கட்சிகள் இணைந்து மாட்டு அரசியலில் ஈடுபடும் மத்திய மதவாத அரசைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமதி கீதா ஜீவன் MLA அவர்கள் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாஹீர்உசேன் கண்டன உரையாற்றினார். ஒருங்கிணைப்பை ஏற்ப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் அவர்களுக்கு மஜகவின் மாவட்ட செயலாளர் நன்றிதனைதெறிவித்தார். இந்நிகழ்வில் மஜகவின் தூத்துக்குடி, ஆத்தூர், உடன்குடி நிர்வாகிகளும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழமை அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தூத்துக்குடி மாவட்டம். #MJK_IT_WING 06.06.2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்களுக்கு வினியோகிப்போம்!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதல பதிவு) புனித ரமலான் மாதம் இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான மாதமாகும். திருக்குர்ஆன் உலக மக்களுக்கு அருளப்பட்ட மாதம் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது. உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் இறையச்ச உணர்வோடு நோன்பிருந்து, நல்ல காரியங்களை நாள்தோறும் நிறைவேற்றி, பாவங்களிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நமது நாட்டில் ரமலான் மாதத்தையும், நோன்பையும் இந்து , கிறித்தவ சகோதரர்களும் மிகுந்த மரியாதையோடு உற்று நோக்குகிறார்கள். தங்களின் நட்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களில் சிலர் ஒரு நாள் நோன்பிருந்து ஒரு புதிய அனுபவத்தை பெற்று மகிழ்கிறார்கள். முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளில் வாழும், முஸ்லிம் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது இடங்களில் ரமலான் மாதத்தில் எதையும் சாப்பிட அனுமதிப்பதில்லை. இது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது பாரம்பரிய உறவுகளின் உச்சமாகும். இத்தகைய சூழலில், சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ரமலான் மாதத்தில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புனித ரமலானில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் . இந்நிலையில் அன்பையும் , உறவையும் வலுப்படுத்தும் வகையில் , நோன்பு
மதுபானக்கடையை அகற்றுக..! நாகை MLA., கலெக்டரிடம் வலியுறுத்தல்…!
நாகை. ஜுன்.05., நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றுமாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரியிடம் தொகுதி மக்கள் கோரிக்கை அளித்தனர். பல பொதுநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமாரை தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சந்தித்து நாகை இரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் மதுபான கடையையும், நாகை திருமேனிசெட்டி தெருவில் உள்ள மதுபான கடையையும் உடனடியாக அகற்றிடுமாறு வலியுறுத்தினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் .நாகப்பட்டினம்
கண்ணிய தலைவர் அன்றோ…! நமது காயிதே மில்லத்!
இந்தியாவில் ஒரு தலைவருக்கு 'கண்ணியத்திற்குரிய' என்ற அடைமொழி வழங்கப்படுகிறது என்றால் அது காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களுக்கு மட்டும் தான் என்பது நாடறிந்த உண்மை! கறைபடாத கரம், நேர்மையான சிந்தனைகள், கண்ணியமான அணுகுமுறைகள், எளிமையான பொதுவாழ்வு, தூய்மையான தனி வாழ்வு, சவாலான விவகாரங்களில் துணிச்சலான முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டின் மீது அவர் காட்டிய அக்கறை, தமிழ் மீதான தணியாத தாகம், சமூக நல்லிணக்கத்தில் அவர் காட்டிய உறுதி இவையாவும் அந்த பெருமகனை வரலாற்றின் வெளிச்சத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நேரு, பெரியார், அண்ணா, அபுல்கலாம் ஆசாத், அறிவாசான் அம்பேத்கார், நம்பூதிபாட், தோழர். ஜீவா, ஐயா முத்துராமலிங்கத் தேவர், கலைஞர், MGR, நாவலர் நெடுஞ்செழியன், பேரா.அன்பழகன் என நாடு தழுவிய அளவில் அவர் கொண்டிருந்த நட்புகள் அவரது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்திய - சீன யுத்தம் நடந்தபோது, எனது மகன் மியாகானை ராணுவத்துக்கு பணியாற்ற அனுப்புகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார். எது தேசிய மொழி என நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது, என் மொழி தமிழுக்குத்தான் அந்த தகுதி உண்டு என அடித்துப் பேசினார். நாடு பிளவுப்பட்ட நிலையில், ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களைப் பார்த்து
மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
திருப்பூர்.ஜூன்.04., திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி (ஆகாரம்), M.மீரான் (வெங்கமேடு), E.ரஹ்மான், M.அப்பாஸ், P.ஈஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் J.மீரான்கனி, S.அபுதாஹீர், S.அப்துல் அக்கிம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அணி நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளராக A.முஹம்மது சஹாபுதீன் அவர்களும், துணைச் செயலாளராக S.அபுதாஹீர் அவர்களும், மாவட்ட வர்த்தகரணி செயலாளராக M.காஜாமைதீன் அவர்களுடன் மேலும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக P.நவ்பில் ரிஜ்வான் அவர்களும் நியமனம் செய்ய மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. பெரிய தோட்டம் பகுதியில் கிளை அமைப்பது எனவும், இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக இந்த ரமலானில் மக்களிடன் பித்ரா தொகையை வசூலித்து அதை உரிய மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகவல்; தகவல்