நாகர்கோவிலில் மஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு!!


நாகர்கோவில்
செப். 26,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் இன்று நாகர் கோவிலுக்கு வருகை தந்தார்.

நாகர்கோவில் மாநகரம் கோட்டாரில் மாநில பொருளாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூச் செண்டு கொடுத்து மஜக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக பொதுமக்கள், மற்றும் காவல்துறையினருக்கு, கபசுர சூரணம் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில்,மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் நகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், மற்றும் கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகர்கோவில்_மாநகரம்
#கன்னியாகுமரி_மாவட்டம்
26.09.2020