கோவை:ஏப்.17., கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகரம் முழுவதும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆய்வின் போது கோட்டைமேடு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 17.04.2020
Month:
கோவையில் சுகாதாரத்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!
#காவல்துறையுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் பணியில் மஜக_வினர்!! கோவை:ஏப்.16., கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கோவை குறிச்சி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காவல்துறையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இணைந்து மக்கள் கூட்டத்தை அரசு அறிவுறுத்திய சமூக விலகல் படி ஒழுங்குபடுத்தி சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 16.04.2020
அறந்தாங்கியில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம்!
ஏப்.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி நகரம் சார்பில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அறந்தாங்கி நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், மஜக மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் சாகுல் அமீது தொடக்கி வைக்க நகர செயலாளர் ஜகுபர் சாதிக் தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் முகம்மது ஹாலித் உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு தங்கள் இல்லங்களிலிருந்து பாத்திரங்கள் கொண்டு வந்து ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட பொதுமக்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவந்த நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் வாகனத்தில் எடுத்து சென்று விநியோகம் செய்தனர். மேலும், நகரின் பிறபகுதிகளிலும் கபசுர குடிநீரானது தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.
மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
சென்னை.ஏப்ரல்.16., இந்தியா முழுவதும் கடந்த 23 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக வில்லிவாக்கம், சூளைமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்களை பல கட்டங்களாக விநியோகித்து வருகின்றனர். மேலும் கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருபவர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தனர். இதுவரை 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக விநியோகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைமேற்கு 16-04-2020
லால்பேட்டையில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம்!
ஏப்.15, இன்று கடலூர் தெற்கு, லால்பேட்டை பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மூலிகை மருந்தான 'கபசுர குடிநீர்' மஜகவினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மஜக அவசர ஊர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டு மெயின்ரோடு, புது பஜார், ஸ்கூல் தெரு, கொத்தவால் தெரு, பனேஷா பள்ளி, இக்பால் வீதி, வடக்கு தெரு, மேலத்தெரு போன்ற வீதிகளிலும், தொடர்ந்து மாலை நேரத்தில் கொல்லமலையிலும் பொதுமக்கள் இல்லங்களைத் தேடி சென்று வழங்கியதால் ஆர்வமுடன் வாங்கிப் பருகினர். இதில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, நகர செயலாளர் ஜாபர் சாதிக், நகர பொருளாளர் யூனுஸ், நகர துணை செயலாளர் பிரபு, நகர நிர்வாகிகள் நூர் முஹம்மது, நிஷார், நியாஸ் உள்ளிட்ட மஜகவினர் இப்பணியில் ஈடுப்பட்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING | #லால்பேட்டை_பேரூர் #கடலூர்தெற்குமாவட்டம்.