ஜன.25., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது.Mcom. அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது இந்தியா எங்களின் தாய்மண் எங்களுக்கு குடியுரிமை தருகிறோம் வாருங்கள் என அரபு நாடுகள் அழைத்தாலும் செல்லமாட்டோம் ஏனெனில் அங்கு மன்னர் ஆட்சியின் கீழ் இருப்பதை விட எங்கள் இந்து சகோதரர்களும் கிறிஸ்தவ சகோதரர்களும் மாமன் மச்சான்கள் போல் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை மட்டுமே நேசிக்கிறோம் இருபோதும் இம்மண்ணை விட்டு செல்லமாட்டோம் எங்களை பிரிக்க நினைக்கும் மோடியும், அமித்ஷாவும், வேண்டுமானால் கைலாசா நாட்டிற்கு செல்லலாம் என பேசினார். இந்நிகழ்வில் YMJ தலைவர் அல்தாபி, மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர். மஜக சார்பில் மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுபக்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி, அம்ஜத் மீரான், தேவாரம், அபுதாஹிர், ஷாஜகான், இக்ராம்,
Month:
பொள்ளாச்சியில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்! ஷமீம்அகமதுகண்டனஉரை
ஜன.24., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது, அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது இந்நாட்டின் அரசமைப்பு சட்டத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது எனவும் தன்னுடைய ஆட்சியின் இயலாமையை மறைக்க தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை இயற்றி வருவதாகவும் அதை இந்தியர்களாய் நாம் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் KM.சரீப், பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஷானவாஸ்கான், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் நகர, ஒன்றிய, வார்டு, நிர்வாகிகள்
பொய் வழக்கு போடும் காவல்துறைக்கு மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!
சென்னை அயனாவரத்தில் கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... 'இந்த போராட்டங்கள் மக்கள் கரங்களுக்கு போய் விட்டது. இதில் கட்சி கொடிகளை, இயக்க பேதங்களை மறந்து பங்கேற்கிறார்கள். போராட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கிறது. மக்கள் மூவர்ண தேசிய கொடிகளை ஏந்தி அணிவகுக்கிறார்கள். இது வரலாறு காணாத எழுச்சியாகும். இது சிலருக்கு பொறுக்கவில்லை. எனவே தேசிய கொடிகளை தூக்குவோர் மீது தேசிய கொடிகளை அவமதித்ததாக வழக்கு போடுகிறார்கள். இது அப்பட்டமான அநீதியான பொய் வழக்குகளாகும். காவல்துறை மனசாட்சி யுடன் செயல்பட வேண்டும். மக்கள் தேசிய கொடிகளை தூக்குவதற்கு சல்யூட் அல்லவா அடித்திருக்க வேண்டும். மாறாக பொய் வழக்கு போடுவதா? இது மேலும் எங்கள் உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் வீறு கொண்டு மேலும், மேலும் எழுவோம்.' இவ்வாறு அவர் பேசினார். இதில், திருச்சி வேலுச்சாமி, ஹைதர் அலி, இயக்குனர் கெளதமன், பச்சை தமிழகம் அருள், த.பெ.தி.க குமரன், வழக்கறிஞர் அஜ்மல்கான் போன்றோர் உரையாற்றினர். மஜக சார்பில் N.A.தைமிய்யா, புதுமடம் அனிஸ், அசாருதீன், சாகுல், பிஸ்மி, அன்வர் உட்பட மஜக வினர் பங்கேற்றனர். மாணவர் இந்தியா சார்பில் பஷீர் அஹ்மது
நாங்களும் ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம்! மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை.ஜனவரி 24, இன்று மதியம் 2 மணிக்கு சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. தன்னெழுச்சியாக மக்கள் வரும் வழியெங்கும் இணைந்தது பேரெழுச்சியாக இருந்தது. இதனால் பிராட்வே சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து பாரிமுனை குறளகம் அருகே பெரும் கூட்டம் திரண்டதால் அது ஆர்ப்பாட்ட களமாக மாறியது. இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசியதாவது... நாடெங்கும் மக்கள் எழுச்சி பெருகி வருவதால் போராட்டம் தொய்வின்றி அமைதி வழியில் தொடர்கிறது. மத்திய அரசு திணறுகிறது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம், வன்முறை முடிந்த பிறகு இது தொடர்பான வழக்குகளை விசாரிப்போம் என பொறுப்பில்லாமல் சொல்கிறது. வன்முறை எங்கே நடக்கிறது? ஒரிரு இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அமைதியாகத் தானே போராட்டங்கள் நடக்கிறது. வர வர உச்ச நீதிமன்றத்தின் மீது நமக்கு நம்பிக்கை குறைகிறது. இவர்கள் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மத்திய அரசு பிடிவாதம் காட்டக் கூடாது. மக்கள் உணர்வுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். ஜனநாயக சக்திகளாகிய நாங்களும் சொல்கிறோம். இதிலிருந்து மக்களாகிய
குடியுரிமை திருத்த சட்டத்தால் அஸ்ஸாமில் இலட்சக்கணக்கான இந்துக்கள் பாதிப்பு : முதமிமுன்அன்சாரி_MLAபேச்சு!
தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச் செயலாளர் தாஜ்தீன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு மல்லப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் இரா.அன்பழகனார், அப்துல்ரஹ்மான் Ex.MP, து.கிருஷ்ணசாமி வாண்டையார், தம்பிக்கோட்டை நிலக்கிழார் எம்.கே.எஸ்.செந்தில் குமார், பண்ண வயல் நிலக்கிழார் எஸ்.ராஜா தம்பி சேர்வை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களின் நலன்களுக்காக தான் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை குறிப்பிட்டார். பிறகு, குடியுரிமை கறுப்பு சட்டங்கள் தொடர்பாக பேசியவர். NRC போன்ற சட்டங்களால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கான இந்துக்களின் குடியுரிமை பறிபோய் இருப்பதாக கூறியவர். இது நாடு முழுக்க அமுலானால் எல்லா சமூக மக்களும் பாதிப்படைவார்கள் என்றும், எனவே தான் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார். அதனால் தான் நாள்தோறும் எல்லா சமூக மக்களின் ஆதரவும் பெருகி வருவதாக கூறியவர். நாட்டுக்கு தொழிற்சாலைகள், நல்லகல்வி கூடங்கள், தரமான மருத்துவமனைகள், அகன்ற சாலை போன்றவை தான் தேவை என்றார். இது போன்ற பிரிவினைகளை, குழப்பங்களை ஏற்படுத்தும் சட்டங்கள் தேவையில்லை என்பதே மக்களின் எண்ணமாகும் என்றும் இடித்துரைத்தார். இந்நிகழ்வில், மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன், மஜக