பொள்ளாச்சியில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்! ஷமீம்அகமதுகண்டனஉரை


ஜன.24.,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது, அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது இந்நாட்டின் அரசமைப்பு சட்டத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது எனவும் தன்னுடைய ஆட்சியின் இயலாமையை மறைக்க தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை இயற்றி வருவதாகவும் அதை இந்தியர்களாய் நாம் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் KM.சரீப், பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஷானவாஸ்கான், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் நகர, ஒன்றிய, வார்டு, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இப்பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
24.01.2020