ஜனவரி.3.., இன்று தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஜமாத்தினர் இதற்கு ஆதரவு அளித்து திரளாக பங்கேற்றனர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசியதாவது.. பல கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இருக்கும்போது, நாங்கள் வாழ்வுரிமைக்கான போராட்ட களத்தை நடத்தி வருகிறோம். அதில் கவனம் செலுத்தியதை விட இதில் தான் தீவிரமாக இயங்கி வருகிறோம். இது நாட்டை காக்கும் அறப்போராட்டம். இது எங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நாளுக்கு நாள் போராட்ட களம் வீரியமடைகிறது. மக்கள் தன்னெழுச்சியாக திரள்கிறார்கள். மத நல்லிணக்கத்துடன் கூடிய இன்னொரு சுதந்திர போராட்டமாக இது மாறியுள்ளது. இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெறும் வரை ஓய மாட்டோம். இவை தொடக்கம் தான். இன்னும் முழுமையான போராட்டம் தொடங்கவில்லை. வட இந்திய ஊடகங்களிடம் போராட்ட காட்சிகளை, செய்திகளை முக்கியப்படுத்த வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளதாம். இருட்டடிப்புகளை தாண்டி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூடி மறைக்க முடியாது. இந்த போராட்டங்களை சில மூளை வீங்கிகள் கொச்சைப்படுத்தி, தங் களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். போராட்டம் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள்
Month:
காங்கிரஸ் கொண்டு வந்த NPR சட்டமும் பாஜக கொண்டு வந்த சட்டமும் ஒன்றா? முதமிமுன் அன்சாரி MLA கேள்வி.
ஜனவரி.03, இன்று திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதி அளவிளான கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கண்டன உரையாற்றினார். அப்போது பேசியதாவது .. NRC சட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு என்றதும் கொல்லைப்புறம் வழியாக அதன் கேள்விகளை NPR சட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு வஞ்சகமாக திட்டமிடுகிறது. வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை வரவேற்கிறோம். ஆனால் NPR சட்டம் என்பது இதிலிருந்து மாறுபட்டது. அது வேறு இது வேறு. NPR சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று கூறி தப்பிக்க பார்க்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா? காங்கிரஸ் கொண்டு வந்த NPR ல் 15 கேள்விகள் மட்டுமே இருந்தன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த NPR சட்டத்தில் கூடுதலாக 6 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 6 கேள்விகள் என்பது அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்ட NRC சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாகும். பாட்டன், பூட்டனின் பிறந்த ஆவணத்தை எங்கு தேடுவது? 1970 களுக்கு பின்னால் தானே, பிறந்த தேதி ஆவணங்கள் முறையாக பதிவாகின. அதற்கு
கானத்தூரில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் CAAஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!! : எஸ்எஸ்ஹாரூன் ரசீது கண்டனஉரை
கானத்துர்.ஜனவரி.03.., பாஜக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் அமைதி வழியில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள், தமிழ்தேசிய அமைப்புகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (03-01 2020) செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது M.Com., கலந்து கொண்டு CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சு.க.விடுதலைச் செழியன், விசிக மாவட்டச் செயலாளர் சு.ரா.ராஜ்குமார், திமுக கானத்தூர் ஊராட்சி செயலாளர் M.சௌந்திரபாண்டியன், SDPI மாநில பேச்சாளர் கிண்டி அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பள்ளியின் மெளலான A சிராஜுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மஜக மாவட்டப் பொறுப்புக்குழு தலைவர் கல்பாக்கம் ரஷீத், மாவட்டப் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சர்தார், கானத்துர் தீன், கானத்துர்
கறுப்புசட்டங்களுக்கு எதிராக புலிப்படை நிற்கும்! இராமநாதபுரத்தில் கருணாஸ் உறுமல்!
ஜனவரி 03, இராமநாதபுரத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக சார்பில் மாவட்ட செயலாளர் இலியால் பங்கேற்று கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் கறுப்பு சட்டங்களை கடுமையாக சாடி தனக்கே உரிய பாணியில் பேசினார். அது போல் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசும் போது மோடி - அமித் ஷா கூட்டணியின் வஞ்சகங்களை தோலுரித்தார். இதில் முக்குலத்து புலிப் படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பங்கேற்று, 45 நிமிடங்கள் அனல் பறக்க பேசினார். கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்றவர், இப்போராட்டத்திற்கு புலிப் படை என்றும் துணை நிற்கும் என்றதும் கூட்டம் ஆராவரித்தது. பசும்பொன் தேவர் உங்களோடு உறவு பாராட்டியது போல நானும் உங்களோடு நிற்பேன் என்றதும் கூட்டம் முழக்கங்களை எழுப்பி அதை உற்சாகமாக வரவேற்றது. இக்கூட்டத்திற்கு தேவர் சமுதாய மக்கள் திரண்டு வந்து வலு சேர்ந்தனர். முக்குலத்தோர் புலிப் படையினர் ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இந்நிகழ்வில் நவாஸ் கனி MP, இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஆலம், உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இது பல இன மக்களையும், பல தரப்பினரையும்
அரசியல் சட்டபாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் CAA வை எதிர்த்து துணைப் பொது செயலாளர் என்.ஏ.தைமிய்யா கண்டன உரை
சென்னை., ஜன.03 CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கின்றனர். இதனடிப்படையில், இன்று 03.01.2020 மதியம் 3.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அரசியல் சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு (CITIZEN'S CHENNAI PROTEST) சார்பில் ஐயா.நல்லக்கண்னு அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தோழர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP, SDPI தலைவர் நெல்லை முபாரக், தெஹ்லான் பாகவி, NTF பொதுச்செயலாளர் A.S அலாவுதீன், வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, திருமுருகன் காந்தி, தியாகு, சுந்தரவள்ளி, INTJ பாக்கர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு கண்டன