அரசியல் சட்டபாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் CAA வை எதிர்த்து துணைப் பொது செயலாளர் என்.ஏ.தைமிய்யா கண்டன உரை

சென்னை., ஜன.03

CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கின்றனர்.

இதனடிப்படையில், இன்று 03.01.2020 மதியம் 3.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அரசியல் சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு (CITIZEN’S CHENNAI PROTEST) சார்பில் ஐயா.நல்லக்கண்னு அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் தோழர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP, SDPI தலைவர் நெல்லை முபாரக், தெஹ்லான் பாகவி, NTF பொதுச்செயலாளர் A.S அலாவுதீன், வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, திருமுருகன் காந்தி, தியாகு, சுந்தரவள்ளி, INTJ பாக்கர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என்று திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
03-01-2020