சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்_CAAவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! மஜக பங்கேற்பு


சென்னை.ஜனவரி.04..,

CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில், நேற்று 03.01.2020 மதியம் 2.30 மணியளவில் சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் K.அமானுல்லா கான் அவர்களின் தலைமையில் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது, மாநில இளைஞரணிச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி செயலாளர் புதுப்பேட்டை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் MP, திமுக சட்டமன்ற உறுப்பினர் J.அன்பழகன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், EX வக்ஃப் வாரிய தலைவர் S. ஹைதர் அலி, YMJ தலைவர் P.M. அல்தாபி, INTJ மாநில செயலாளர் S.M. சைய்யது இக்பால், AIMPLB உறுப்பினர் பாத்திமா முஸாபர், SDPI மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, MUHI அறங்காவளர் அன்ஸருத்தீன் மக்கீ, தமிழ்நாடு ஷியா ஜமாத் துணைத் தலைவர், தப்ரேஸ் அலிகான் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என்று திரளானோர் பங்கேற்றனர்.

இறுதியாக YMJ துணை தலைவர் S. அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
03-01-2020