மே-15 தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க வேண்டும்..! ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை சுமுகமாக தீர்க்க வேண்டும்..! நாகூர் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! (தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..) இன்று (09-04-18) தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவரது கிரீன்வேஸ் இல்ல வீட்டில் சந்தித்துப் பேசினார். நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், காரைக்காலில் அமைந்துள்ள 'மார்க்' தனியார் துறைமுகத்தால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதனால், அங்கு நிலக்கரியை நிரந்தரமாக இறக்குமதி செய்ய தடை விதிக்க புதுவை அரசுக்கு, தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கடந்த மே 4 அன்று நாகூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, 64 பேர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமலான் நோன்பு கஞ்சிக்கு, தமிழக அரசு சார்பில் வினியோகிக்கப்படும் இலவச அரிசியை மே 15 தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கிடைக்க செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்
Month:
தமிழக ஹாஜிகளுக்கு புத்தக பயிற்சி முகாம்…! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று உரை..!!
சென்னை.மே.09., தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 2018ஆம் வருடம் மெக்கா (புனித ஹஜ் யாத்திரை) செல்லும் ஹாஜிகளுக்கு புத்தக பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 09.05.2018
காஷ்மீரில் மரணமடைந்த தமிழரின் இறுதி சடங்கில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!
சென்னை.மே.09.,காஷ்மீரில் அரசுப்படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கல்வீச்சில் படுகாயமடைந்து உயிர் துறந்த தமிழர் திருமேனி செல்வன் அவர்களின் உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் உடல் இறுதி சடங்குகாக எடுத்து வரப்பட்டது. அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சி (#மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு, அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுதர்சனம் அவர்களும் அங்கு வந்திருந்தனர். பொதுச்செயலாளருடன் மஜக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், பொருளாளர் செய்யது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், ஆவடி நகரச்செயலாளர் சாகுல் ஹமிது, பொருளாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் தேவகாந்தி பாபு மற்றும் சதாம் உசேன், கபீர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 09.05.2018
நன்றி அண்ணே…! “நீட்” தேர்வு எழுதிய பிரியதர்ஷினி நாகை MLA வுக்கு நேரில் நன்றி!
நாகை தொகுதியிலிருந்து "நீட்" தேர்வு எழுத செல்பவர்களுக்கு முழு தொகையும் "ஸ்பான்சர்கள்" வழங்கப்படும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அறிவித்தார். இதில் 5 பேர் உதவிகளை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத சென்றனர். கேரளாவிலிருந்து முதலில் திரும்பியுள்ள மாணவி பிரியதர்ஷினி, நாகை வந்து இறங்கியுள்ளார் தமிமுன் அன்சாரி MLA அவர்களை, தனது அப்பா வெங்கட் மற்றும் தம்பியுடன் வந்து நெகிழ்ச்சியுடன் "நன்றி" அண்ணே…… என்று கூறினார். "நீட்" தேர்வில் பெற்றிப்பெற MLA அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும்! வெல்லட்டும் வெல்லட்டும்! சமூக நீதி வெல்லட்டும் தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம், 09/05/2018.
மதுரையில் மஜகவின் மேலும் ஓர் தண்ணீர் பந்தல் திறப்பு..! துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு…!
மதுரை.மே.08., மதுரை வடக்கு மாவட்டத்தில் #மனிதநேய _ஜனநாயக_கட்சி கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கிய #தண்ணீர் பந்தலுக்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவும் வரவேற்பையும் தொடர்ந்து. மேலும் மாவட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் இந்த நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படையில் இன்று காலை ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் #மன்னை_செல்லச்சாமி அவர்கள் #நீர்மோர்_பந்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்., இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஒத்தக்கடை கிளைச்செயலாளர் கனி, துணைச்செயலாளர் முகம்மது, துணைச் செயலாளர் ராஜா, மீனவர் அணி ஷாஜகான், பீர் முகம்மது, ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தெற்கு மாவட்ட செயலாலர் மொய்தீன். வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர்கள் சசிக்குமார், சிக்கந்தர், ஒன்றிய செயலாளர் சுலைமான், தொழிலாளர் அணிச்செயலாளர் அப்பாஸ், மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவிராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தகவல் #மஜக _தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 08-05-18