காஷ்மீரில் மரணமடைந்த தமிழரின் இறுதி சடங்கில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!

சென்னை.மே.09.,காஷ்மீரில் அரசுப்படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கல்வீச்சில் படுகாயமடைந்து உயிர் துறந்த தமிழர் திருமேனி செல்வன் அவர்களின் உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் உடல் இறுதி சடங்குகாக எடுத்து வரப்பட்டது.

அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சி (#மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு, அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுதர்சனம் அவர்களும் அங்கு வந்திருந்தனர்.

பொதுச்செயலாளருடன் மஜக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், பொருளாளர் செய்யது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், ஆவடி நகரச்செயலாளர் சாகுல் ஹமிது, பொருளாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் தேவகாந்தி பாபு மற்றும் சதாம் உசேன், கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
09.05.2018