திருவாரூர்.மார்ச்.26., திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது . திருவாரூர் நகரம் , கொடிக்கால்பாளையம் மற்றும் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் மஜக கொடிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை H.சேக் அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்றினர் . இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலி கட்டிமேடு அய்யூப் கான் அடியக்கமங்கலம் நிஜாமுதீன் மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பொதக்குடி அசாருதீன் வர்த்தக அணி செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா தொழிற்சங்க அணி செயலாளர் புலிவலம் ஷேக் தாவூத், மீனவர் அணி செயலாளர் செய்யது மீரான் விவசாய அணி செயலாளர் பொதக்குடி நத்தர் கனி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தகவல்
தமிழகம்
தமிழகம்
நீராதாரத்தை பெருக்க வேண்டும் .! சட்டபேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…
(பகுதி -6) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இவ்வாண்டு பருவ மழை 60% குறைவாக பெய்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசு இதற்காக எடுத்திருக்கும் முன் முயற்சிகளை வரவேற்கிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுக்க இப்பிரச்சினை புதிய சவாலாக உருவாகும் எனத் தெரிகிறது. எனவே நீர் மேலாண்மையில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் முறையை நாம் பின்பற்ற வேண்டும். அதுபோல மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக பழைய புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதில் இப்போது எத்தனை இருக்கிறது என்று தெரியவில்லை. தெலுங்கானாவில் 22 ஆயிரம் கோடியில் அரசு தொடங்கியிருக்கும் 'மிஷன் காகதீயா' எனும் இயக்கம் மூலம் 8 ஆயிரம் நீர்நிலைகளை மீட்டுருவாக்கி சாதனை செய்திருக்கிறார்கள். இதை நாம் பின்பற்றலாம். நிறைய நீராதாரங்களை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுபோல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இனி முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் கடலில் கலக்கும் நதிநீரை தடுக்கும் வகையில் தடுப்பணைகளை கட்டுவதோடு, தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இதன்மூலம்
வெளிநாடுவாழ் தமிழர்களின் நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வைக்க வேண்டும்…
(தமிழ்நாடு சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை) (பகுதி - 5) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... வெளிநாடு வாழ் தமிழர்கள் குறிப்பாக சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை , புருனே , பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்பு நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வாங்கி இடம்பெற செய்ய வேண்டும் . தற்போது நான் சிங்கப்பூர் , மலேசியாவுக்கு சென்றபோது அங்குள்ள தமிழ் இலக்கியவாதிகள் இக்கோரிக்கையை வைத்தனர் . எனவே தமிழக அரசு இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் . இவ்வாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் பேசினார் . தகவல் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 26.03.2017
நாகையில் பாரம்பரிய உணவு திருவிழா M. தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…
நாகை. மார்ச்.25., இன்று நாகப்பட்டிணம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நல துறை சார்பில் "ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டம்" மூலம் பாரம்பரிய உண திருவிழா நடைப்பெற்றது. இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று சிறப்பித்தார், கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், குதிரை வாலி, தினைவரகு, சாமை, மக்கா சோளம், உள்ளிட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் கண்காட்சியும், அது சார்ந்த விழிப்புணர்வும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு விழிப்புணர்வு பெறலாம். இதில் M.தமிமுன் அன்சாரி MLA பேசும்போது நமது பாரம்பரிய சுவையைப் பற்றி சிலாகித்து கூறினார். விறகு அடுப்பில் மண் பானையில் மீன் குழம்பு சமைத்தால் ருசியாக இருக்கும். மீனோடு, மாங்காய், கத்திரிக்காய், முருங்கை போட்டால் அந்த குழம்பு மணக்கும். இப்போது அப்படி யாரும் சாப்பிடுவதில்லை. காலையில் சிறந் உணவு இட்லிதான், ஆனால் பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் கொடுப்பது பெருமையாக பேசுகிறோம், நோயாளிகளுக்கு ஆப்பிள் கொடுப்பதை பெருமையாக கருதுகிறோம். ஆனால் கொய்யாப்பழமும், நெல்லிக்காயும் அதைவிட சத்தானது என்பதை
முத்துப்பேட்டையில் மாநில பொருளாளர் மற்றும் மாநில செயலாளர்!
முத்துப்பேட்டை, மார்ச்.26., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளரக சகோதரர் (தக்பீர்) #நெய்னா_முகம்மது அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். நகர செயலாளராக பணியாற்றிவந்த சகோதரர் #மைநூர்தீன் அவர்களை மாவட்ட துணை செயலாளருக்கு பரிந்துரைத்து முடிவு செய்யப்பட்டது. மாநில பொருளாளர் அண்ணன் ஹாரூன் ரசீது அவர்களும், மாநில செயலாளர் அண்ணன் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் ஆலோசனைகளை வழங்கினர். எதிர்வரும் ஏப்ரல் 22 ம் தேதி நகரில் முக்கிய இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றுவது என முடிவுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி. மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING முத்துப்பேட்டை ஒன்றியம் திருவாரூர் மாவட்டம்.