வெளிநாடுவாழ் தமிழர்களின் நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வைக்க வேண்டும்…

(தமிழ்நாடு சட்டசபையில்  தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை)

(பகுதி – 5)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

வெளிநாடு வாழ் தமிழர்கள் குறிப்பாக சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை , புருனே , பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்பு நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வாங்கி இடம்பெற செய்ய வேண்டும் .

தற்போது நான் சிங்கப்பூர்  , மலேசியாவுக்கு சென்றபோது அங்குள்ள தமிழ் இலக்கியவாதிகள் இக்கோரிக்கையை வைத்தனர் . எனவே தமிழக அரசு இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்  .

இவ்வாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் பேசினார் .

தகவல்

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
26.03.2017