காஞ்சி.பிப்.23., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்டம் சாா்பாக கொடி ஏற்றுதல், தெருமுனை பிராச்சாரம், மருத்துவ முகாம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக மாவட்ட செயலாளா் ஜிந்தா மதாா் அவா்களின் தலைமையில் இன்று முதற்கட்டமாக நான்கு நகர நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் முஹமது யாக்கூப் மாவட்ட, துணை செயலாளா்கள் தாம்பரம் ஜாகீா் உசேன், ஆலந்தூா் சலீம், அணி செயலாளா்கள் பம்மல் ரஹமத்துல்லாஹ், தாம்பரம் காஜா சலீம், பம்மல் அப்துல் காதா் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் நகர செயலாளா்கள் கண்டோன்மெண்ட் அப்துல்சமது, ஆலந்தூா் அல்தாஃப், பல்லாவர நகர துணை செயலாளா் த.அப்துல்லா, பம்மல் மஃக்பூல், கண்டோன்மெண்ட் நகர துணை செயலாளா் த.தமினா ஆகியோா் கலந்து கொண்டனா். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் ! நாகூரில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
நாகை. பிப்.11., இன்று நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் ( MJTS ) நாகை (தெ) மாவட்ட செயலாளர் அல்லா பிச்சை அவர்களின் மகள் திருமணத்தில் பங்கேற்று மஜக செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:- நாகூர் மக்கள் எனக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்துள்ளார்கள். அதனால் சாதி, மதங்களை கடந்து அனைவருக்கும் நான் பணியாற்றுகிறேன். பல நல திட்டங்களை நாகூரில் அமல்படுத்தி வருகிறேன். காரைக்கால் - வாஞ்சூரில் அமைந்துள்ள மார்க் துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரி இறக்குமதியால் நாகூர், பட்டிணச்சேரி, பனங்குடி பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை முதல் முதலில் நான் தான் சட்டமன்றத்தில் பேசினேன் என்பதை அனைவரும் அறிவர். விதிகளை மீறி செயல்படும் மார்க் துறைமுகத்திற்கு எதிராக, நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய கோரி விரைவில் நாகூரில் மஜக சார்பாக பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்படும். அது தமிழ்நாடு, புதுச்சேரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். அதில் தமிழகத்தின் பிரபல தலைவர்கள் பங்கேற்பார்கள். விரிவான ஆலோசனைக்கு பிறகு, அது எத்தகைய போராட்டம் என்பது
அலங்காரங்களை கொண்ட பட்ஜெட்!மத்திய பட்ஜெட் குறித்து மஜக விமர்சனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) 2018 - 2019 ஆம் ஆண்டடிற்கான மத்திய பட்ஜெட் என்பது கடந்த 4 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட "பெரு முதலாளிகளை" திருப்திப்படுத்தும் பட்ஜெட்டின் வரிசையிலேயே இடம் பெற்றிருக்கிறது. 3வது இடத்தில் வலுவான பொருளாதார தேசமாக இருந்த இந்தியா, இன்று 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. நிதிபற்றாக்குறை என்பது 3.2 சதவிதத்திலிருந்து 3.5 சதவிதமாக உயர்ந்திருக்கிறது. இதை இந்த பட்ஜெட் மூடி மறைக்கிறது. கறுப்பு பணத்தை மீட்டு ஓவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பாஜக கூறிய தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சியன் இறுதி பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படும் என்ற எதிர்ப்பார்பு மீண்டும் பொய்யாகி இருக்கிறது. சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களான மலைவாழ் மக்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் வறுமை நிலைக்கேற்ப எந்த ஒரு அறிவிப்புகளும் இதில் இல்லை. அதுபோல் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நலன்கள் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளன. விவாசயிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என
ஈரோட்டில்_மஜக_பொதுச்செயலாளர்_எழுச்சி_உரை!
ஈரோடு. ஜன.27., ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் ஏற்பாடு செய்திருந்த ஷரீஅத் சட்ட பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டத்தில், தோழமை கட்சி நிர்வாகிகளும், பிற சமுதாய அமைப்பு நிர்வாகிகளும், கிறிஸ்தவ பேராயர்களும் கலந்துகொண்டனர். இந்த சிறப்புவாய்ந்த கூட்டத்தில், மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருச்சி வேலுச்சாமி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர், இதில் உரையாற்றிய வேலுச்சாமி அவர்கள், பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தார், இறுதியாக எழுச்சி உரையாற்றிய M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தற்போது பாஜக காட்டிவரும் பூச்சாண்டிகளை பட்டியலிட்டவர், பாஜக எப்போதெல்லாம் சிக்கலுக்கு உள்ளாகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற விசமத்தனங்களை பரப்பி மக்களை பதட்டத்தில் உள்ளாக்குகிறார்கள். இப்போது ஜி.எஸ்.டி யால் ஏற்பட்ட தோல்வியை மறைக்க முத்தலாக் விசயத்தை கையில் எடுத்துள்ளார்கள் எனவும், முஸ்லிம்கள் இந்த விசயத்தில் உணர்ச்சிக்கு இடமளிக்காமல் அறிவுப்பூர்மாக செயலாற்ற வேண்டும் எனவும் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயலும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாட்டில் உள்ள மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என உரையாற்றினார்.! தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 27-01-18
மஜக பொதுச் செயலாளருடன்… சமூக மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு !
நாகை. ஜன.24., இன்று நாகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை, சமூக மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அம்பி வெங்கடேஷ் அவர்கள் சந்தித்து தன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தார். வேளாளர் சமுதாய மக்களை முன்னிருத்தி, செயல்படும் இக்கட்சி சமீபத்தில் முத்தலாக் விவகாரத்தில் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்திருந்தது . சமூக நீதி, தமிழர் வாழ்வுரிமை ஆகிய களங்களில் மஜகவுடன் இணைந்து செயல்படவும் தயராக இருப்பதாக அம்பி வெங்கடேஷ் தெரிவித்தார். அவரது திருமணத்தில் நிச்சயம் பங்கு கொள்வதாகவும் மஜக பொதுச்செயலாளர் தெரிவித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 24.01.2018