ஈரோட்டில்_மஜக_பொதுச்செயலாளர்_எழுச்சி_உரை!

ஈரோடு. ஜன.27., ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் ஏற்பாடு செய்திருந்த ஷரீஅத் சட்ட பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டத்தில்,
தோழமை கட்சி நிர்வாகிகளும்,
பிற சமுதாய அமைப்பு நிர்வாகிகளும், கிறிஸ்தவ பேராயர்களும் கலந்துகொண்டனர்.

இந்த சிறப்புவாய்ந்த கூட்டத்தில், மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA  அவர்களும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருச்சி வேலுச்சாமி அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்,

இதில் உரையாற்றிய வேலுச்சாமி அவர்கள், பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தார்,

இறுதியாக எழுச்சி உரையாற்றிய M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள்,
தற்போது பாஜக காட்டிவரும் பூச்சாண்டிகளை பட்டியலிட்டவர்,
பாஜக எப்போதெல்லாம் சிக்கலுக்கு உள்ளாகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற விசமத்தனங்களை பரப்பி மக்களை பதட்டத்தில் உள்ளாக்குகிறார்கள்.

இப்போது ஜி.எஸ்.டி யால்  ஏற்பட்ட தோல்வியை மறைக்க முத்தலாக் விசயத்தை கையில் எடுத்துள்ளார்கள் எனவும், முஸ்லிம்கள் இந்த விசயத்தில் உணர்ச்சிக்கு இடமளிக்காமல் அறிவுப்பூர்மாக செயலாற்ற வேண்டும் எனவும் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயலும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாட்டில் உள்ள மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என உரையாற்றினார்.!

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
27-01-18