நெல்லை.நவ.07., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள கலிமா குளம் என்று அழைக்கப்படும் கண்ணிமார் குளத்தை தூர்வாரபடாமல் மணல் மேடாகவும் கருவேல மரங்கள் நிறைந்து காடாகவும் மாறி இருக்கும் நிலையில் அந்த மிகப்பெரிய குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்து பாதுகாத்திட வலியுறுத்தி பல ஆண்டுகளாக அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் போராடி வருகிறது அந்த வகையில் மனித நேய ஜனநாயக கட்சியும் அந்த கண்ணிமார் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி சுற்றுசுவர் ஏழுப்புவதற்கும் போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மேலப்பாளையம் வருகை புரிந்த தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அந்த குளத்தை நேரில் பார்வையிட்டனர். அந்த குளத்தை சுத்தம் படுத்தி அந்த குளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வரும் டிப்டாப் தமிழன் குழுவின் நிர்வாகி முஜாஹித் சிக்கி அவர்கள் அந்த குளத்தை பற்றியும் குளத்தை பாதுகாக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் விவரித்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அந்த குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA விடம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்
தமிழகம்
தமிழகம்
மஜக சேலம் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…
சேலம்.நவ.07., நேற்று முன்தினம் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி அளவில் சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் U.அமிர் உசேன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் I. ஹைதர் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட துணை செயலாளர்கள் O.S.பாபு A.மஹபுப் அலி A.அம்ஜத் அலி முன்நிலை வகிக்க, மாவட்ட இளைஞரணி செயலாளர் A.அஸ்லாம் கான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.முகமது அலி, மாவட்ட தொழில்சங்க அனி செயலாளர் K.சதாம் உசேன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் H.முனவர்கான், மாணவர் இந்தியா செயலாளர் அப்ரார், கொன்டாலாம்பட்டி பகுதி செயலாளர் D.சர்புதீன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் H.ஷேக் ரபீக் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார் மற்றும் இக்கூட்டத்தில் டிசம்பர்-6 அன்று நடக்க உள்ள ரயில் நிலையம் முற்றுகை போராட்டம சிறப்பாக நடத்துவது என்றும் திர்மானம் நிறை வேற்றப்பட்டது. #தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாநகர்_மாவட்டம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!
திருவள்ளூர்.நவ.07., மீஞ்சூர் பகுதி அத்திப்பட்டு புதுநகரில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றது. தொடர் மழையால் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. நேற்றும் பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவைப் பெற்றுக் கொண்ட மக்கள் எத்தனை மழை வந்தாலும் எங்கள் பகுதி மக்களுக்கு மஜகவினர் தான் உணவு வழங்குகின்றனர் என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பணிகளை வெகுவாக பாராட்டி மஜகவுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர். மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச் செயலாளர் கரிமுல்லா, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் நிஜாம், மாவட்ட இளைஞரணி செயலார் ஜகன், மீஞ்சூர் பகுதி செயலாளர் அன்சர், திருவொற்றியூர் பகுதி செயலாளர் கதிர் உசேன், பகுதி பொருளாளர் ஷஹின்ஷா, துணைச் செயலாளர் ஆரிஃப் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_கிழக்கு 06.11.17
கோவை NP இட்டேரியில் வீடுகளை இடிக்க முயற்சி செய்த PWD அதிகாரிகள்..! தடுத்து நிறுத்திய மஜக-வினர்..!
கோவை.நவ.06., கோவை மாநகராட்சி 95-வது வார்டு NP இட்டேரில் 60 ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசித்து வருகிறார்கள். இன்று காலை எந்தவித கணக்கெடுப்பு பணியும் நடத்தாமல் எந்தவித முன்னரிவிப்பும் இல்லாமல் அந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் புல்டோசருடன் சென்றனர். தகவல் அறிந்த மஜக மாவட்ட துணை செயலாளர் ரபீக், கிணத்துக்கடவு பகுதி செயலாளர் ஜாபர்அலி, பொருளாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் அபு, ஹாருண்ரஷீது, அக்பர், ஹக்கீம், மற்றும் குறிச்சிப்பிரிவு கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளை இடிக்க முற்பட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து தாசில்தார், மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய மஜகவினர் எந்த வித முன்னரிவிப்பும் இன்றி வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக மஜக நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் தற்போது வீடுகள் இடிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்திக்க அறிவுறுத்தினார் அதை தொடர்ந்து ஆணையரை சந்திக்க மஜக நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் சென்றனர், ஆனால்
மஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம்…!
தூத்துக்குடி.நவ.5., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம் நேற்று 05/11/2017 தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முன்னிலையில் வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டார். டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்க கோரி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை தூத்துக்குடி தெ மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடி தெ மாவட்டத்தில் உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கிளை கட்டமைப்பு வளிமைபடுத்துவது குறித்தும் விவாதிக்கபட்டு நல்ல முடிவு எடுக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #தூத்துக்குடி தெற்கு மாவட்டம், 05/11/2017