திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!

image

image

image

திருவள்ளூர்.நவ.07., மீஞ்சூர் பகுதி அத்திப்பட்டு புதுநகரில் மழை வெள்ளத்தால்  மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு  தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றது.

தொடர் மழையால் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்..

நேற்றும் பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உணவைப் பெற்றுக் கொண்ட மக்கள் எத்தனை மழை வந்தாலும் எங்கள் பகுதி மக்களுக்கு  மஜகவினர் தான் உணவு வழங்குகின்றனர் என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பணிகளை வெகுவாக பாராட்டி மஜகவுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன.

அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச் செயலாளர் கரிமுல்லா, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் நிஜாம், மாவட்ட இளைஞரணி செயலார் ஜகன், மீஞ்சூர் பகுதி செயலாளர் அன்சர், திருவொற்றியூர் பகுதி செயலாளர் கதிர் உசேன், பகுதி பொருளாளர் ஷஹின்ஷா, துணைச் செயலாளர் ஆரிஃப் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு
06.11.17