கடலூர்.ஆக.20., இன்று கடலூர் மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் "மலரட்டும் மணிமுத்தாறு" என்ற திட்டம் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கூட்டு முயர்ச்சியில் துவங்கப்பட்டு, இன்று நடைபெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் அன்வர் தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம் 20.08.17
மஜக விவசாய அணி
கதிராமங்கலம் காப்போம்! எழுச்சிமிகு அணிவகுப்புடன் கதிராமங்கலம் நுழைவு! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸுக்கு உணர்ச்சிகர வரவேற்பு!
குடந்தை.ஆக.14., தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்தார். மேலும் அவருடன், தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்ததோடு, இதுகுறித்து தமிழக முதல்வரிடமும் முறையிட்டனர். சட்டசபை வளாகத்தில் இதற்காக போராடி வரும் இயக்குநர். கெளதமனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தனர். இச்சூழலில் பழ.நெடுமாறன், மணியரசன் மற்றும் இயக்குநர் கெளதமன் போன்ற தோழர்கள் கதிராமங்கலம் வருமாறு அழைப்பு விடுத்தனர். இன்று (14-08-2017) கும்பகோணத்திற்கு வருகை தந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் எழுச்சியான வாகன அணிவகுப்புடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கதிராமங்கலத்திற்கு அழைத்து வந்தனர். மஜக சார்பில் மோட்டார் பைக்குகள் மட்டுமின்றி 100 க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். அனைத்து வாகனங்களின் பின்பகுதிகளிலும் மஜக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒட்டப்பட்ட "எங்கள் நிலத்தை திருடாதே" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதுபோல் கார்களின் முன்புறத்தில் " கதிராமங்கலம் காப்போம்" என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
தூத்துக்குடியில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு…!
தூத்துக்குடி.ஆக.13., இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 12.08.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்னன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் அவர்களும், மாவட்ட பொருளாளர் அ.நவாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் எதிர்வரும் 16.08.2017 புதன்கிழமை காலை 10மணிக்கு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி (தெற்கு) மாவட்டம். 12.08.2017
நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் நாகப்பட்டினம் வருகை! மஜக மாநில விவசாய அணி செயலாளர் தலைமையில் வரவேற்பு!
#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நாகை.ஆகஸ்ட்.11., கடந்த (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #M_தமிமுன்_அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு வருகை தந்தது. அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை.முபாரக் அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் தோழர் P.R. பாண்டியன் அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். தோழர் P.R. பாண்டியன் அவர்கள் தனது உரையில் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்றத்தில்
நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை…
#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை... முத்துப்பேட்டை.ஆக.09., நேற்று முன்தினம் (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு வருகை தந்தது. அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் பிரச்சார பயணத்தின் நோக்கத்தையும், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தனது பிரச்சார உரையில் விளக்கி பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 09.08.2017