வேலூர்.ஏப்ரல்.18., கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா போன்ற பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறை அனுமதியுடன் அவர்களுடன் இணைந்து தொண்டூழியர்களாக (Volunteers) மனிதநேய ஜனநாயக கட்சியினர் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்து, பால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதில் தன்னார்வலர்களாக மஜக-வினரின் மனிதநேயப்பணிகள் காவல் துறை மற்றும் பொதுமக்களால் பாரட்டப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் அமீன் முன்னிலையில் இளைஞர் அணியினர் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து நாட்களும் தேவை கருதி இப்பணி தொடரும் என்று மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின் தெரிவித்தார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 17.04.2020
கொரோனா வைரஸ்
கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் அச்சன் புதூரில் கபசுரகுடிநீர்
கொரோனா விழிப்பணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது!! தென்காசி:ஏப்.18., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். அச்சன்புதூரில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அவர்கள் தொடங்கி வைத்தார். கொரோனா விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரத்தை தென்காசி மாவட்டச் செயலாளர்.M.பீர்மைதின் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் S.முஹமது நாசர், நகரப் பொருளாளர் P.கமால்தீன், நகர துணைச் செயலாளர்கள் M.சேக்முகமது உசேன், ரியாஸ் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மஜக-வினரின் இப்பணியை பொதுமக்கள், பெரிதும் பாராட்டினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 17.04.2020
மஜக திருவாரூர் மாவட்டம் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்!
சென்னை.ஏப்ரல்.17., இந்தியா முழுவதும் கடந்த 24 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக திருவாரூர் மாவட்டம் சார்பாக மாவட்டப் பொருளாளர் சேக் அப்துல்லாஹ் தலைமையில் புலிவலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் அஷமது ஜலால், துணைச் செயலாளர் நிஜாமுதீன், நகரச் செயலாளர் சித்திக், நகரப் பொருளாளர் பாலா, கிளை செயலாளர் சேத்தப்பா (எ) முகம்மது மைதீன், கிளை இலைஞர் அணிச் செயலாளர் ரியாஜி மற்றும் கமாலுதீன், அன்சாரி உள்ளிட்ட மஜகவினர் பல குழுக்களாக பிரிந்து நிவாரண பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 17-04-2020
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை!, தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் ஆய்வுப்பணியில் மஜக வினர்
கோவை:ஏப்.17., கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகரம் முழுவதும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆய்வின் போது கோட்டைமேடு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 17.04.2020
கோவையில் சுகாதாரத்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!
#காவல்துறையுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் பணியில் மஜக_வினர்!! கோவை:ஏப்.16., கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கோவை குறிச்சி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காவல்துறையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இணைந்து மக்கள் கூட்டத்தை அரசு அறிவுறுத்திய சமூக விலகல் படி ஒழுங்குபடுத்தி சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 16.04.2020