திண்டுக்கல்.மார்ச்.08., திண்டுக்கல் மாவட்டம் #மாணவர்_இந்தியா சார்பாக எதிர் வரும் 12.03.2017 அன்று நடைபெற உள்ள மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை அலைக்கும் நிகழ்வு நேற்று மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜகவின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்களும் சென்றார்கள். சென்ற இடங்களில் மாணவர் இந்தியா அமைப்பினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெருமையாகவும் மேலும் நன்றாக வளர வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு, மாணவர் இந்தியா திண்டுக்கல் மாவட்டம். 08.02.2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLAக்கு சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் வரவேற்பு .!
சிங்கப்பூர்.மார்ச்.07., சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) ஏற்பாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி முஸ்தபா சென்டரின் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது . சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் Y.செய்யது யூசுப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் . இதில் சிங்கப்பூரில் செயல்படும் கடையநல்லூர் , தென்காசி , கீழக்கரை , நாகூர் , முத்துப்பேட்டை , பொதக்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர் . தங்கள் ஊரை சேர்ந்தவர் என்ற பாச உணர்வோடு சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வட்டார மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து பாராட்டினர் . இதில் சமூக ஆர்வலர்கள் , தொழிலதிபர்கள் , ஊடகத்துறையினர் என பலரும் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் அவர்கள் நாகையின் MLA ஆனதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர் . தகவல் மனிதநேய கலாச்சாரப் பேரவை. #MJK_IT_WING சிங்கப்பூர் மண்டலம் 07.03.2017
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் மஜக மாநிலச் செயலாளர் & மாணவர் இந்தியா நிர்வாகிகள் சந்திப்பு…
சென்னை, மார்ச்.07., கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட பாட திட்டத்தின் அடிபடையில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயமாக கற்று தேர்வு எழுத வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால், சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் இச்சட்டத்தால் மொழி சிறுபான்மை பள்ளிகூட நிர்வாகிகள், மாணவர்கள் சார்பாக சென்னை உயர் நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்குதொடர்ந்த பள்ளி கூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தமிழக அரசுக்கு சென்ற வாரம் உத்தரவிட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பள்ளிகூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடராத பள்ளி கூடங்களுக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருது மட்டும் இதர சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பாதிக்கபட்ட மாணவர்களுக்கு
மஜக வின் 4 வது ஆம்புலன்ஸ் ஆயங்குடியில்…
சேவைக்கான களம் விரிகிறது.. #மஜகவின்_அடுத்த_ஆம்புலன்ஸ்_தயாற்! கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 வது அவசர ஊர்தி சேவை அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக தயாராகிவிட்டது. தொடர்புக்கு மஜக லால்பேட்டை நகரம் 9488892960 மஜக ஆயங்குடி நகர கிளை 9444978528 குறிப்பு- கோவை, இளையான்குடி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் ஏற்கனவே மஜக அவசர ஊர்திகள் பொதுமக்கள் சேவையாற்றி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கடலூர் மாவட்டம்