திருவாரூர்.ஜூன்.21., நேற்று 20/06/2017 செவ்வாய் கிழமை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முஹம்மது அவர்கள் தலைமையில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் இலக்கிய பேரவை, பத்திரிக்கையாளர் சங்கம், அரிமா சங்கங்களின் பிரதிநிதிகளும், அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமாகா அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், மற்றும் முத்துப்பேட்டை ஜமாத் மஹல்லா நிர்வாகிகளும், இளைஞர்களும், சகோதர சமுதாய நண்பர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மஜக நகர துணை செயலாளர் நாஸர் அவர்கள் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது. நகர மஜகவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அணைவருக்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன் அவர்கள் நன்றி கூறினார். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING முத்துப்பேட்டை நகரம். 20/06/2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மாடு விற்பனை குறித்த தீர்மானம்.! அதிர்ந்தது சட்டமன்றம்..! மஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!
சென்னை.ஜூன்.20., கடந்த 23.05.2017 அன்று மாடு விற்பனை குறித்தும், இறைச்சிக்காக பசு, ஒட்டகங்கள், எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்தும் வெளியிட்ட அறிவிப்புகள் நாடெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியது. இதுகுறித்து மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விரிவாக பேசி ஆதரவு திரட்டி வந்தார். அவரும் கடந்த 12.06.2017 அன்று சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர். K.R.ராமசாமி, மஜக சார்பில் M. தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, முஸ்லீம் லீக் சார்பில் அபூபக்கர் இப்பிரச்சனையை எழுப்பினர். கருணாஸ் பேச எழுந்த போது அவர் முன்கூட்டியே கடிதம் தராததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி அவர்கள், இது குறித்து வழக்கு நடைபெறுவதால், இம்மாதம் நீதி மன்றத்திற்கு அந்த வழக்கு வருவதாலும் அதன் பிறகு இந்த அரசு, பெரும்பான்மையான மக்களின் முடிவுகளை ஏற்று நடவடிக்கை எடுக்கும் என்றார். தீர்மானம் நிறைவேற்றாவிட்டாலும், குறைந்தபட்சம் இதை கோவா போல
நீட் மற்றும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மஜக பொதுச் செயலாளர் சட்டமன்றத்தில் உரை…!
(கடந்த 15.06.2017 அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மூன்றாம் பகுதி) தமிழகத்தில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு உயர் கல்வியில் பல சாதனைகளை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அறிவு தலைநகரமாக மாறி வருவது வரவேற்கதக்கது. தேசிய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 24.5% இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது 24.5% உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்லூரிகளுக்கான NIRF தர வரிசை பட்டியலில், 2017 ஆம் ஆண்டில். தேசிய அளவில் முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சாதனைகள் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டலில் பீடு நடை போட வாழ்த்துகிறேன். அதோடு இத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்கிறேன். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக, மாண்புமிகு அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது இந்த அவையில் எனது கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறேன். அதன் பல அம்சங்கள் சமூக நீதிக்கு எதிரானவை. அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போது தான்
தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பில் கண்டன கூட்டம்…! மஜக பங்கேற்பு…!!
தூத்துக்குடி.ஜூன்.19.,நேற்று 18.06.2017 மாலை 7மணிக்கு தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பாக கதிராமங்கலத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சி விற்பனையில் தடையை திரும்பப்பெற கோரியும், திருமுருகன் காந்தி உள்ளிட்ட சகோதரர்கள் அனைவரின் விடுதலை செய்யக்கோரியும் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி (தெ) மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தூத்துக்குடி (தெ) மாவட்டம். #MJK_IT_WING 18.06.2017
மஜக வேலூர் (கி) மாவட்டம் சார்பில் (இஃப்தார்) நோன்பு துறப்பு நிகழ்ச்சி ! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…!
வேலூர்.ஜூன்.19., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று 18-06-2017 இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது M.Com, இணைப் பொதுச்செயலாளர் மவ்லவி மதுரை மைதீன் உலவி, அவைத் தலைவர் நாசர் உமரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். மேலும் மாவட்ட அமைப்புக்குழு நிர்வாகிகள், பகுதி,கிளை நிர்வாகிகள் மற்று மனிதநேய சொந்தங்கள் ஜமாத்தார்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வேலூர் (கி) மாவட்டம் 18.06.2017