சேலம்.மார்ச்.14., சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் JNU பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட உண்மை நிலை அறிய மாணவர் இந்தியா சேலம் மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர் பியாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர் முத்துகிருஷ்ணன் அவர்களது இல்லத்திற்க்கு சென்றனர். பெரும் சோகத்தை சூழ்ந்துகொண்ட சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் முத்துகிருஷ்ணனின் அண்ணனிடம் நடந்த விபரங்களை கேட்ட பொழுது தன் தம்பி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறினார்.மேலும் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை,தலித் மாணவர்களின் சுயமாரியாதைக்கு என்றும் பாதுகாப்பு இல்லை என்று முத்துகிருஷ்ணனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முத்துகிருஷ்ணனின் தற்கொலையில் நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா போராடும் என்று ஆறுதல் கூறினர். இச்சந்திப்பில் பாபு, சதாம், அம்ஜத்,சாந்த் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: ஊடக பிரிவு, மாணவர் இந்தியா, சேலம் மாவட்டம். #Maanavar_India
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக-மாணவர் இந்தியா கோரிக்கையை ஏற்று சாலை அமைப்பு…
திருவள்ளூர்.மார்ச்.13., திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி தியாகி சத்தியமூர்த்தி நகர் 6வது தெரு குறுகிய தெருவென்பதால் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது. பின்னர் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் முயற்சியில் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் செய்யப்பட்டது. தேர்தல், வர்தா புயல், நகராட்சி தேர்தல் தாமதம் என நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இத்தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மாணவர் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து தந்த அரசு நிர்வாகிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 13.03.2017
சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம்!
சேலம்.மார்ச்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் 12-03-2017 அன்று நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் மெஹபூப் அலி, முஸ்தபா, சேக் ரபீக், அம்ஜத் அலி, பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 20-03-2017 திங்கள் கிழமை மாலை பொதுக்கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING சேலம் மாவட்டம்
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் நியமனம்…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல து.செயலாளராக சகோ. நெல்லை அப்துல் வாஹிது அவர்களும், மக்கள் தொடர்பு செயலாளராக (PRO) சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது. புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் பணி சிறக்க வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
திண்டுக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA பேட்டி!
திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்...! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும். வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும். மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது. இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை