சென்னை.பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 28_02_17 செவ்வாய்கிழமை மாலை 6மணியளவில் சென்னை, ஷேக் தாவுது தெருவில் "மக்கள் திரள் பொது கூட்டம்" நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித், மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது , பகுதி செயலாளர் பஷீர், பொருளாளர் அசன் பொதுக்கூட்ட அழைப்பை வழங்கினர்... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) மத்திய சென்னை மாவட்டம். 22.02.17
செய்திகள்
மதுக்கடையை அகற்றக்கோரி மஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
வேலூர்.பிப்.22., வேலூர் மாநகரம் பில்டர்பெட் சாலையில் அமைந்துள்ள மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூராக உள்ளது எனவும், மதுக்கடைக்கு எதிரில் கல்வி நிலையமான B.P.R நர்சரிங் இருப்பதும், சில அடி தூரத்தில் கிருத்தவ தேவாலயமும், கோவிலும் இருப்பதன் காரணமாக மதுக்கடை மிகவும் இடையூராக இருப்பதை சுட்டிக்காட்டி உடனே மதுக்கடையை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ராமன் அவர்களிடம் மஜக மாவட்ட செயலாளர். S.முஹம்மத் ஜாபர் அவர்களின் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மஜகவின் மாவட்ட,நகர,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING). வேலூர் கிழக்கு மாவட்டம். 22.02.2017
பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை : அரசு நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடி மஜக கோரிக்கை…
வேலூர்.பிப்.21., நேற்று 20-02-2017 திங்கள் கிழமை வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. அதை வாங்கிய நபர் அதை விற்ற கடையின் உரிமையாளரிடம் ஏன் இப்படி மக்கள் உடலை கெடுக்ககூடிய பிளாஸ்டிக் முட்டையை விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த கடையின் உரிமையாளர் அந்த நபரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் துன்புறுத்தியுள்ளார். இதை அறிந்த மஜக மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசீம் அக்ரம் இதை அனைத்து கடைகளில் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்றும் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் மேலும் சீனா முட்டைகள் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதிப்பவர்கள் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது இப்படியே தொடருமானால் மஜக சார்பில் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் நபரை தாக்கிய கடையின் உரிமையாளர் மீது உடனடியாக காவல்துறை கைது செய்யது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) வேலூர் மாவட்டம். 21.02.17
500 மதுக்கடைகள் மூடல் மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பு…
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) அதிமுக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு கோப்பில் முதல் கையெழுத்து போட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பிரதான கோரிக்கையை மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, 2 வது கட்டமாக அமுல்படுத்தியிருப்பது எங்களுக்கு இந்த அரசின் மீது பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இது தவிர உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் 20,000/- ரூபாய் ரொக்கம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி 12000/- லிருந்து 18000/- ஆக உயர்வு. மீனவர்களுக்கு 5000 ஆயிரம் வீடுகள் என்பதையும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செய்து அமுல்படுத்தி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்முயற்சிகளை மனிநேய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கிறது. இவண், M தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 20.02.17
புலியங்குடியில் மதவாத பாஜக அரசை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…
நெல்லை .பிப்.20., நெல்லை(மேற்கு) மாவட்டம் புளியங்குடியில் நேற்று பிப்.19 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்கள் கொள்கைகளை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மஜகவின் முதல் பொதுக்கூட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அனைவருக்கும் உற்சாகம் தந்தது சமூகத்தின் பலதரப்பினரும் குறிப்பாக 90சதவிகிதம் உள்ளூர் மக்கள் பங்கேற்றது இதன் சிறப்பம்சம்மாகும். இதில் மஜக பொதுசெயளாலர் M.தமீமுன் அன்சாரி MA, MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயளாலர் N.A.தைமியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். இதில் மாவட்ட செயளாலர் தென்காசி i.மீரான், தூத்துக்குடி மாவட்ட செயளாலர் ஜாஹீர் உசேன், விருந்துநகர் மாவட்ட செயளாலர் இப்ராகிம், நெல்லை கிழக்கு மாவட்ட செயளாலர் கலில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) நெல்லை மேற்கு 20.02.17