தூத்துக்குடி.ஜூன்.11., நேற்று 10.06.2017 தூத்துக்குடியில் மாட்டு அரசியல் நடத்தும் மத்திய அரசை கண்டித்தும், தோழர்.திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழ் புலிகள் அமைப்பினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உறையாற்றினார்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தூத்துக்குடி மாவட்டம், #MJK_IT_WING 10.06.2017
செய்திகள்
வடகரையில் நாகை MLA மக்கள் சந்திப்பு…
நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரையில் இன்று பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஜமாத்தார்களை சந்தித்துப் பேசினார். பிறகு கடைவீதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து குறைகள் மற்றும் விருப்பங்களை கேட்டறிந்தார். மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி பரிந்துரை கடிதங்கள், விதவை பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்க பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை வழங்கினார். பிறகு தனது நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாக்கம் - கோட்டூருக்கு பார்வையிட சென்றார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09.06.2017
கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..! மஜக நிர்வாகிகள் ஆறுதல்…!!
கோவை.ஜூன்.08., கோவை உக்கடம் மஜீத் காலனியில் வசித்து வரும் சுலைமான் என்பவரின் மகன் சல்மான் (19) மற்றும் மகள் சக்கீலா பானு (16) ஆகியோர் நேற்று மின்சார விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்) தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உடனடியாக அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், DRO, RDO மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும் அக்குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு செல்வதாக மஜக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். தகவல். தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 08-06-2017
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…
நாகை.ஜூன்.08., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை நகராட்சிக்கு உட்பட்ட EGS பிள்ளை கல்லூரி சாலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17, ரூபாய் 20 லட்சம் மதிப்பீடு கொண்ட சாலையின் நீளம் - O- 215 மீட்டர் - 215- 430 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 08/06/2017
கத்தாரை தனிமைப்படுத்துவது நல்லதல்ல .!
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த நான்கு நாடுகளும் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஈரானின் புதிய அதிபர் ஹஸன் ரவுஹானியை கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல்தானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை ஒரு குற்றமாக அந்நாடுகள் கூறியுள்ளன. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தந்திரங்களும், திட்டங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை. கத்தார் அமெரிக்காவுடன் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்கிறது. இது தவிர எகிப்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொர்ஸி அவர்களின் ஆட்சி கவிழ்ப்பை அந்த நான்கு நாடுகளும் ஆதரித்தன. அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் கத்தார் எதிர்த்ததையும் இங்கே கவனிக்க வேண்டும் . கத்தார், பாலஸ்தீன போராட்டத்திற்கு துருக்கியை போலவே குறிப்பாக ஹமாஸ் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தரும் நாடு . மேலும் CNN, BBC ஊடகங்களுக்கு மாற்றாக அல்ஜெஸிரா எனும்